இலங்கை – இஸ்ரேல் பாராளுமன்ற நட்புறவு சங்கம் அமைக்கும் முயற்சி ஒத்திவைப்பு.

Date:

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழான பத்தாவது பாராளுமன்றத்தில் முதற்தடவையாக இலங்கை – இஸ்ரேல் பாராளுமன்ற நட்புறவு சங்கம் அமைப்பதற்கான முயற்சி பின்போடப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவினால் இந்த நட்புறவுச் சங்கம் அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச இதற்கான எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார்,

இதன் ஆரம்பக் கூட்டம் இன்று செப்டம்பர் 12ஆம் திகதி பி.ப. 2.00 மணிக்கு பாராளுமன்றத்தின் CR 04 இல் நடைபெற ஏற்பாடாகியிருந்தது.

இச்சங்கத்தில் சேர விரும்பும் பாராளுமன்ற உறுப்பினர்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பாராளுமன்றத்தின் வெளிநாட்டு உறவுகள் மற்றும் நெறிமுறை அலுவலகத்தில் ஒப்படைக்குமாறும் கோரப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே இலங்கை – இஸ்ரேல் பாராளுமன்ற நட்புறவுச் சங்கம் அமைக்கும் முயற்சி பிற்போடப்பட்டுள்ளது. புதிய திகதி அறிவிக்கப்படவில்லை.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...