இஸ்லாத்தின் உயரிய செய்தியை உலகுக்கு கொண்டு வந்த நாள்; பிரதியமைச்சர் முனீர் முளப்பர் வாழ்த்துச் செய்தி

Date:

தேசிய மீலாதுன் நபி விழாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரின் வாழ்த்துச் செய்தி .

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறப்பைக் குறிக்கும் தேசிய மீலாத் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து இலங்கையர்களுக்கும் , குறிப்பாக உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் சமூகத்திற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் .

அல்லாஹ்வின் இறுதித் தூதராகவும், மனிதகுலம் முழுவதற்கும் வழிகாட்டியாகவும் முஸ்லிம்களால் கருதப்படும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறப்பு மற்றும் மரணத்தை நினைவுகூரும் நாளே மீலாதுன் நபி என்பதாகும். இதன் முக்கியத்துவம் ஆன்மீக மற்றும் சமூக பரிமாணங்களில் உள்ளது.

இந்த நாள், இஸ்லாத்தின் செய்தியைக் கொண்டு வந்த நபி (ஸல்) அவர்களின் பிறப்பைக் கொண்டாடுகிறது. இது ஒரு சர்வவல்லமையுள்ள இறைவன் மீதான நம்பிக்கை , கருணை , நீதி மற்றும் சமூக சமத்துவத்தை மையமாகக் கொண்டதாகும்.

இது முஸ்லிம்களுக்கு நபி (ஸல்​) அவர்களின் முன்மாதிரியான தன்மை , அவரது கருணை , பணிவு மற்றும் தலைமைத்துவம் ஆகியவற்றைப் பற்றி சிந்திக்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

மேலும், இது நபி (ஸல்)  அவர்களின் சமாதானச் செய்தி மூலம் சகிப்புத்தன்மை , சமத்துவம் மற்றும் மற்றவர்களுக்கு சேவை செய்வதலையும் வலியுறுத்துகிறது, மேலும் மத எல்லைகளை மீறும் இந்த காலத்தால் அழியாத மதிப்புகளை ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் நினைவூட்டுகிறது.

இலங்கை உட்பட பல நாடுகளில் மீலாத் தினமானது ஒரு தேசிய விடுமுறைத் தினமாக  அங்கீகரிக்கப்பட்டுள்ளது.  இது இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் முஸ்லிம் சமூகத்திற்கான மரியாதையாகவும் சமயங்களுக்கு இடையிலான சகவாழ்வின் முக்கியத்துவத்தையும் குறிக்கிறது.

இந்த தினத்தை விழாவாக கொண்டாடுவது மட்டுமல்லாது¸ முஸ்லிம்களாகிய நாம்  அனைவரும் தயவு, நீதி, நேர்மை மற்றும் மனிதகுலத்திற்கான சேவை போன்ற நபியவர்களின்  முன்மாதிரியான வாழ்க்கையைப் பின்பற்றுவதற்கும் எம்மை அர்ப்பணித்தல் வேண்டும் .

இலங்கையின் பல்வேறு மாவட்டங்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தேசிய மீலாதுன் நபி விழாவினை நாடு முழுவதும் கொண்டாடுவதன் மூலம் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் கலாச்சாரங்களுக்கிடையேயான உரையாடலை வளர்த்து, இலங்கையினை வளப்படுத்தும் பன்முகத்தன்மையை வெளிப்படுத்துகின்றது. இந்த ஆண்டு, தேசிய மீலாத் விழாக் கொண்டாட்டங்கள் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நடைபெறுவதால் கூடுதலான  முக்கியத்துவத்தினைப் பெறுகிறது.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தினை தேர்ச்தெடுத்தமையானது , நமது நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு தேசிய கொண்டாட்டங்களை நெருக்கமடையச் செய்வதற்கான நமது கூட்டு முயற்சிகளைப் பிரதிபலிக்கிறது. மேலும் இலங்கையின் பல சமயங்களினதும் பல இனங்களினதும் தன்மை மற்றும் ஒற்றுமையின் உணர்வை வலுப்படுத்துகிறது.

இந்த புனிதமான சந்தர்ப்பத்தில் , நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நீடித்த செய்தியை நாம் அனைவரும் சிந்திப்போம். கண்ணியத்துடன் வாழவும் , நீதியை நிலைநாட்டவும் , பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாக்கவும், எதிர்கால சந்ததியினருக்கு அமைதியைப் பாதுகாக்கும் இலங்கையை உருவாக்கவும் இந்த மீலாதுன் நபித் தினத்தில் நாம் அனைவரும் உறுதிமொழி எடுப்போம் என அவரது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

மீலாத் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் விநியோகம்

புத்தளம், மன்னார் சாலை 4ஆம் மைல் கல் விலுக்கை கிராம பள்ளிவாசல்,...

மல்வானையில் காதிரிய்யதுன் நபவிய்யா ஏற்பாட்டில் மீலாத் நடைபவனி

"அண்ணலாரின் 1500 ஆவது மீலாத் தினத்தை அழகிய முறையில் அலங்கரிப்போம்" என்ற...

நபிகளாரின் சகோதரத்துவம், அமைதி மற்றும் தியாகத்தை மனதில் வாழ்வை அர்த்தமுள்ளதாக்குங்கள்;ஜனாதிபதியின் மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தி

சகல விதத்திலும் வீழ்ச்சியடைந்துள்ள எமது சமூகத்திற்கு மனிதாபிமானத்தையும் அன்பையும் வழங்கி புதிய...