குறுகிய மணிநேரங்களில் கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்ள வாய்ப்பு!

Date:

கடவுச்சீட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட 4 மணி நேரத்திற்குள் உரிய நபருக்கு கடவுச்சீட்டு வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் துணைக் கட்டுப்பாட்டாளரும் ஊடகப் பேச்சாளருமான மகேஷ் கருணாதாச தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் சேவையின் கீழ் ஒரு நாளைக்கு 1500 முதல் 2000 வரை கடவுச்சீட்டுகளும் வழக்கமான சேவையின் கீழ் சுமார் 1000 கடவுச்சீட்டுகளும் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடவுச்சீட்டு பெற ஒரு நாள் சேவைக்கு 20,000 ரூபாவும் வழக்கமான சேவைக்கு 10,000 ரூபாவும் அறவிடப்படுகிறது. கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கும் போது தேசிய அடையாள அட்டையில் ஏதேனும் தெளிவின்மை இருந்தால், கால தாமதங்கள் ஏற்படக்கூடும்.

எனவே, கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கும் போது மக்கள் தங்கள் தேசிய அடையாள அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழில் கவனம் செலுத்தி, அவை தெளிவாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

16 வயதில் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு பல ஆண்டுகளில் பின் உடல் வடிவமைப்பில் மாற்றங்கள் ஏற்படுவதனை கருத்தில் கொண்டு 10 ஆண்டுகளுக்கு கடவுச்சீட்டு வழங்கப்படும்.

மேலும் ஒரு நாள் சேவை மற்றும் வழக்கமான சேவையின் கீழ் ஒரு நாளைக்கு சராசரியாக 4000 முதல் 5000 வரை கடவுச்சீட்டுகள் வழங்கப்படுவதமாக என குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் துணைக் கட்டுப்பாட்டாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

முறிந்த எலும்புகளை ஒட்ட வைக்கும் பசை: சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

முறிந்த எலும்புகளை மூன்றே நிமிடத்தில் ஒட்ட வைக்கும் பசையை உருவாக்கி உள்ளதாக...

2029க்குள் 50 பல்நோக்கு போக்குவரத்து நிலையங்களை உருவாக்க அரசாங்கம் இலக்கு: அமைச்சர் பிமல்

2029 ஆம் ஆண்டுக்குள் குறைந்தது 50 பல்நோக்கு போக்குவரத்து நிலையங்களை நிறுவ...

அரசின் ஆதரவுடன் STEM Feed திட்டத்தை இலங்கையில் அறிமுகப்படுத்திய TikTok

சமூக ஊடக நிறுவனமான TikTok, இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடன் விஞ்ஞானம், தொழில்நுட்பம்,...

மக்கள் புழக்கத்திற்கு விடப்பட்டுள்ள புதிய 2000 ரூபா நாணயத்தாள்.

அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபா புதிய நாணயத்தாள் மக்கள் புழக்கத்திற்கென உத்தரவாதமளிக்கப்பட்ட...