இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

Date:

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர். அதன்படி, சராசரியாக நாளொன்றுக்கு  ஐந்து உயிரிழப்புகள் ஏற்படுவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

நாள்பட்ட சிறுநீரக நோய் (CKD) மற்றும் நீண்டகால சிறுநீரக செயலிழப்பு ஆகியவை சிறுநீர் வெளியேற்றத்தைக் குறைத்து, உடலின் அதிகப்படியான திரவத்தை அகற்ற இயலாமைக்கு வழிவகுக்கும். இதனால் பல சிக்கல்கள் ஏற்படும் என ஆலோசகர் சமூக வைத்தியர் சிந்த குணரத்ன தெரிவித்துள்ளார்.

சிறுநீரக நோய் இரத்த சிவப்பணு உற்பத்தியையும் சீர்குலைக்கிறது. விட்டமின் D அளவைக் குறைக்கிறது மற்றும் இரத்த அழுத்த ஒழுங்குமுறையில் தலையிடுகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) சிறுநீரகம் தொடர்பான நோய்களின் உலகளாவிய அதிகரிப்பு தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார். 10 பேரில் ஒருவருக்கு அவர்களின் வாழ்நாளில் நாள்பட்ட சிறுநீரக நோய் ஏற்படலாம் என மதிப்பிட்டுள்ளது.

2050 ஆம் ஆண்டளவில், சிறுநீரக நோய்கள் உலகளவில் மரணத்திற்கு ஐந்தாவது முக்கிய காரணமாக இருக்கலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் மேலும் கணித்துள்ளது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...