PULSED அமைப்பின் மாணவர் கௌரவிப்பு விழாவில் கலாநிதி ஆஸாத் சிராஸ் அவர்களுக்கு கௌரவம்

Date:

PULSED (Puttalam Union for Literacy, Social and Encouragement Development) அமைப்பின் ஏற்பாட்டில், புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களின் கௌரவிப்பு விழா விமரிசையாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் விசேட அதிதியாக கலந்து கொண்ட மலேசியா சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்று புத்தளம் மற்றும் புத்தளம் ஸாஹிரா கல்லூரிக்கு பெருமை சேர்த்த கலாநிதி ஆஸாத் சிராஸ் அவர்களுக்கு, PULSED அமைப்பின் சார்பில் நினைவுச் சின்னம் வழங்கி சிறப்பு கௌரவம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் உரையாற்றிய கலாநிதி ஆஸாத் சிராஸ் அவர்கள், இவ்வாறான அங்கீகாரமும் மரியாதையும் தமக்குப் பெரும் ஊக்கமாக இருக்கின்றது எனக் குறிப்பிட்டு, PULSED அமைப்புக்கும் நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.

இந்த விழாவின் மற்றொரு சிறப்பாக, PULSED அமைப்பின் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்காக பரிசுகள் வழங்கி அவர்களது வெற்றியை உற்சாகப்படுத்தினர்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...