சிறுவர் தினத்தை முன்னிட்டு தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் விசேட நிகழ்வுகள்!

Date:

எதிர்வரும் சிறுவர் தினத்தை முன்னிட்டு தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் புதிதாக பிறந்த ஹிப்போ குட்டிக்கு பெயரிடும் நிகழ்வு மற்றும் பிற நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், பெயர்களை தெரிவு செய்வதன் மூலம் அதற்கான பரிசுகளை  பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மிருகக்காட்சி சாலையின் பணிப்பாளர் டாக்டர் சந்தன ராஜபக்ச கருத்து தெரிவிக்கையில்,

சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிகா படபெந்தியின் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வுகளுக்கு நிதியுதவி செய்ய பல ஊடக அமைப்புகளும் நிறுவனங்களும் முன்வந்துள்ளன.

கிப்போன் இன குரங்கினங்கள் மற்றும் வரிவால் லெமூர் எனப்படும் மிருகங்களுடன் கூடிய புதிதாக கட்டப்பட்ட ‘குரங்கு தீவின்’ பிரமாண்ட திறப்பு விழாவும் அன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

குரங்கு தீவுக்கு அருகில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மற்றொரு குரங்கு மண்டலமும் புதிதாக காட்சிப்படுத்தப்படவுள்ளது என்றும் அவர் கூறினார்.

தேசிய ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து இந்த நாளை நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட பிற நிகழ்வுகளில் ஓவியப் போட்டிகள், வினா விடைகள் போன்ற பல நிகழ்ச்சிகள் அடங்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

மேல் மாகாண பாடசாலை மாணவர்களிடம் அதிகம் போதைப்பொருள் பயன்பாடு!

நாட்டில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான பாடசாலை மாணவர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் மேல்...

கின்னஸ் சாதனை படைத்த இலங்கை தேயிலை!

உலகின் மிகவும் விலையுயர்ந்த தேயிலை வகையை தயாரித்தது, இலங்கையின் விதானகந்த தேயிலை...

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவத்துக்கு இலங்கை இரங்கல்!

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்த சம்பவத்துக்கு இலங்கை...

சமூக முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்த பிரபல கல்வியாளர் ஜெசிமா இஸ்மாயில் அவர்களுக்கு கௌரவம்

பிரபல கல்வியாளரும் முஸ்லிம் மகளிர் கல்லூரியின் முன்னாள் முதல்வருமான திருமதி ஜெஸிமா...