சிறுவர் தினத்தை முன்னிட்டு தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் விசேட நிகழ்வுகள்!

Date:

எதிர்வரும் சிறுவர் தினத்தை முன்னிட்டு தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் புதிதாக பிறந்த ஹிப்போ குட்டிக்கு பெயரிடும் நிகழ்வு மற்றும் பிற நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், பெயர்களை தெரிவு செய்வதன் மூலம் அதற்கான பரிசுகளை  பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மிருகக்காட்சி சாலையின் பணிப்பாளர் டாக்டர் சந்தன ராஜபக்ச கருத்து தெரிவிக்கையில்,

சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிகா படபெந்தியின் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வுகளுக்கு நிதியுதவி செய்ய பல ஊடக அமைப்புகளும் நிறுவனங்களும் முன்வந்துள்ளன.

கிப்போன் இன குரங்கினங்கள் மற்றும் வரிவால் லெமூர் எனப்படும் மிருகங்களுடன் கூடிய புதிதாக கட்டப்பட்ட ‘குரங்கு தீவின்’ பிரமாண்ட திறப்பு விழாவும் அன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

குரங்கு தீவுக்கு அருகில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மற்றொரு குரங்கு மண்டலமும் புதிதாக காட்சிப்படுத்தப்படவுள்ளது என்றும் அவர் கூறினார்.

தேசிய ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து இந்த நாளை நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட பிற நிகழ்வுகளில் ஓவியப் போட்டிகள், வினா விடைகள் போன்ற பல நிகழ்ச்சிகள் அடங்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...