செப் 07 இல் இலங்கை வானில் தெரியும் குருதி நிலவு..!

Date:

இந்த ஞாயிற்றுக்கிழமை போயா தினத்தன்று (செப்டம்பர் 7) இரவு வானத்தில் பூரண சந்திர கிரகணம் நிகழவுள்ளது. சந்திரனை கடும் சிவப்பு நிறமாக மாற்றும் ஒரு அற்புதமான ‘குருதி நிலவை’ காணும் அரிய வாய்ப்பு இலங்கையர்களுக்கு கிடைக்கவிருக்கிறது.

கொழும்பு பல்கலைக்கழக இயற்பியல் துறைத் தலைவரும் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவு பணிப்பாளருமான பேராசிரியர் சந்தன ஜெயரத்ன கூறுகையில், இது இந்த ஆண்டின் கடைசி முழு சந்திர கிரகணம் ஆகும், இது உலக சனத் தொகையில் கிட்டத்தட்ட 85% பேருக்குத் தெரியும். இந்த நிகழ்வின் தெளிவான காட்சிகளை இலங்கையில் அவதானிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறினார்.

கிரகணம் இரவு 8.58 மணிக்கு ஆரம்பமாகும். அதைத் தொடர்ந்து இரவு 9.57 மணிக்கு பகுதியளவான கிரகணம் ஏற்படும். முழு கிரகணம் இரவு 11.01 மணிக்கு தொடங்கி இரவு 11.42 மணிக்கு உச்சத்தை அடையும், செப்டம்பர் 8 ஆம் தேதி காலை 12.22 மணி வரை இது நீடிக்கும். பகுதியளவான தேயும் கட்டம் அதிகாலை 1.26 மணிக்கு முடிவடையும். முழு நிகழ்வு 5 மணி நேரம் 27 நிமிடங்கள் நீடிக்கும்.

சூரியனுக்கும் பூரண சந்திரனுக்கும் இடையில் பூமி கடந்து செல்லும் போது, ​​அதன் நிழல் விழுந்து, சந்திரனின் வெண்மையான ஒளியை சிவப்பு நிறமாக மாற்றுவதனால் குருதி நிலவு ஏற்படுகிறது என பேராசிரியர் ஜெயரத்ன தெரிவித்தார்.

வானிலை சீராக இருந்தால் ஆசியா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் பெரும்பகுதியில் இந்தக் கிரகணம் தெரிய வாய்ப்புள்ளது.

Popular

More like this
Related

ஹஜ் பெருநாள் எதிரொலி: மேற்கு வங்க பாரதிய ஜனதா கட்சி அரசின் புதிய கால்நடை கட்டுப்பாடுகளால் இந்து வியாபாரிகள் கடும் கடன் சுமை!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி...

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு பிணையில் செல்ல அனுமதி

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். தலங்கம பொலிசாரினால் இன்று...

ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு, போக்குவரத்து ஏற்பாடுகள்

எதிர்வரும் மே மாதம் 28ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள ஹஜ் பெருநாளை முன்னிட்டு...

40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் இலவச விசா !

குறுகிய காலத்திற்கு இலங்கைக்கு வருகை தரும் 40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா...