கேபிள் கார் விபத்தில் 7 பிக்குகள் உயிரிழப்பு, பலர் காயம்!

Date:

மெல்சிரிபுர – பன்சியகம பகுதியில் உள்ள நா உயன ஆரண்ய சேனாசனத்தில் பௌத்த பிக்குகளை ஏற்றிச் செல்லும் கேபிள் கார் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் குறித்த போக்குவரத்தில் ஈடுபட்ட ஏழு பிக்குகள் உயிரிழந்துள்ளனர்.

அதேநேரம், காயமடைந்த ஆறு பிக்குகள் குருணாகலை போதனா வைத்தியசாலை மற்றும் பொல்கஹவெல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த பிக்குகளில் மூன்று வெளிநாட்டு பிக்குகளும் நான்கு இலங்கை துறவிகளும் அடங்குவதாக பன்சியகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் ருமேனியா, ரஷ்யா மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் கூறுகின்றனர்.இந்த விபத்து நேற்று (24) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது கேபிள் காரில் 13 பிக்குகள் இருந்ததாகவும் இந்த வன மடத்தில் தற்போது பல வெளிநாட்டு பிக்குகள் வசித்து வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பிக்குகள் கேபிள் காரில் ஏறி மலை உச்சியில் உள்ள தியான பீடங்களுக்கு செல்ல புறப்பட்ட போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

 

சம்பவம் குறித்து பன்சியாகம பொலிசார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Popular

More like this
Related

ஆசிய அபிவிருத்தி வங்கியால் 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி

ஆசிய அபிவிருத்தி வங்கியால் நாட்டிற்கான 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிக்கு...

பராமரிப்பு வேலைக்கென 633 இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு சென்றுள்ளனர்.

இந்த ஆண்டின் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதில் 633 இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு...

தன் அறிவாலும் பணிவாலும் மக்களின் உள்ளங்களை கவர்ந்து மார்க்கப் பணியாற்றிய அஷ்ஷெய்க் முப்தி யமீன் மறைவு.

அஷ்ஷெய்க் முப்தி யமீன் அவர்கள் புத்தளம் சமூகத்திற்கும் குறிப்பாக கல்விச் சமூகத்திற்கும்...

உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு முன்னரே விடைத்தாள் திருத்தும் பணி ஆரம்பம்!

இம்முறை உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு முன்னரே விடைத்தாள் திருத்தும் பணிகளை...