இலங்கையில் LGBTIQ+ சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் மற்றும் மேம்படுத்தும் திட்டத்திற்கு இலங்கை அதிகாரப்பூர்வமாக ஒப்புதல்!

Date:

இலங்கையில்  (LGBTIQ+) சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் மற்றும் மேம்படுத்தும் திட்டத்திற்கு இலங்கை சுற்றுலாத்துறை அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.

உரிமைகள் அமைப்பான ‘ஈக்குவல் கிரவுண்ட்’ (EQUAL GROUND) இந்தத் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

சுற்றுலாத்துறைத் தலைவர் புத்திக ஹேவாவசம், இந்த முயற்சி இலங்கையை அனைத்து உலகப் பயணிகளுக்கும் பாதுகாப்பான, உள்ளடக்கிய மற்றும் வரவேற்கத்தக்க இடமாக நிலைநிறுத்தும் என்று பாராட்டினார்.

இந்தத் திட்டம் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

இதன் ஒரு பகுதியாக விடுதிகள் மற்றும் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்ட முக்கியத் துறைப் பங்குதாரர்களுக்குப் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வழங்கப்படும்.

வளர்ந்து வரும் இந்தச் சந்தையில் இலங்கையின் பிரபலத்தை அதிகரிக்க, சர்வதேச LGBTIQ+ சுற்றுலா கண்காட்சிகளில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த ஈக்குவல் கிரவுண்ட் அமைப்புக்கு இலங்கை சுற்றுலாத்துறை அதிகாரம் வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...