வெற்றி சோகமாக மாறிய தருணம்: கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகேயின் தந்தை காலமானார்

Date:

இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர் துனித் வெல்லலகேயின் தந்தை சுரங்க வெல்லலகே, தனது 54 ஆவது வயதில் நேற்று (18) காலமானார்.

அதே நாளில் துனித் வெல்லலகே அபுதாபியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆசிய கிண்ண குழு நிலைப் போட்டியில் பங்கேற்றிருந்தார்.

நேற்றிரவு போட்டி முடிந்த பின்னரே 22 வயதான வெல்லலகே இந்த துயரச் செய்தியைப் பெற்றார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை அவர், அணி முகாமையாளர் மஹிந்த ஹலங்கோடாவுடன் அபுதாபியில் இருந்து இலங்கை நோக்கி புறப்பட்டுள்ளார்.

துயரச் செய்தியைக் கேட்டதும் உணர்ச்சிவசப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா கண்ணீர் மல்கக் காணப்பட்டார், பின்னர் வெல்லலகேயை ஆறுதல்படுத்த நேரத்தைச் செலவிட்டார். இதனால் வெற்றி மகிழ்ச்சியில் இருந்த இலங்கை அணியினரின் மனநிலை மாறியது.

தங்கள் குழுவில் முதலிடத்தைப் பெற்றுத் தந்த ஒரு முக்கியமான வெற்றியின் பின்னர் வீரர்கள் அமைதியாக மைதானத்தை விட்டு வெளியேறினர். சோகமான செய்தியால் அவர்களின் கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டன.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...