கடந்த ஒன்பது மாதங்களில் மொத்தம் 1,897 பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்துத் துறையின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் மனோஜ் ரணகல தெரிவித்தார்.
அதிகரித்து வரும் உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்த கடுமையான சட்ட அமுலாக்கம் மற்றும் சாரதிகள் பொறுப்பான வகையில் வாகனம் செலுத்துவது அவசியம்.
போக்குவரத்து பொலிஸார், கவனக்குறைவாக வாகனம் செலுத்துபவர்களை கண்காணிக்க நாடு முழுவதும் 70 அதிவேக கண்டறியும் இயந்திரங்களை நிறுவியுள்ளனர்.
2025 ஆம் ஆண்டில் மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் அதிகளவில் அதிகரித்துள்ளது. அதன்படி, 923 விபத்துக்கள் பதிவாகியுள்ளன. இதன் விளைவாக 514 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டின் வீதிகளில் மேலும் துயர சம்பவங்களைத் தடுக்க, மேம்படுத்தப்பட்ட வீதிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் அதிக பொது விழிப்புணர்வும் அவசியம் என்று அவர் கூறினார்.