மல்வானையில் காதிரிய்யதுன் நபவிய்யா ஏற்பாட்டில் மீலாத் நடைபவனி

Date:

“அண்ணலாரின் 1500 ஆவது மீலாத் தினத்தை அழகிய முறையில் அலங்கரிப்போம்” என்ற தொனிப்பொருளில் காதிரியதுன் நபவிய்யா தரீக்காவின் ஆன்மீகத்தலைவர் சங்கைக்குரிய சேகுநாயம் அல்-ஆலிமுல் பாழில் அஷ் ஷெய்ஹுல் காமில் அஷ் சேஹு அஹ்மத் இப்னு முஹம்மத் நாயகம் அன்னவர்களின் ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்கும் அமைவாக

நேற்று (04) மள்வானையில் மாபெரும் மீலாத் நடைபவனி இடம் பெற்றது.

பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட இந்த மீலாத் ஸலவாத் நடைபவனி நேற்று வியாழக்கிழமை காலை 10.45 மணிக்கு அல் முபாரக் தேசிய பாடசாலை மைதான வளாகத்திலிருந்து ஆரம்பித்து தல்கல முபாரக் மௌலானா தக்கியா ஷெய்ஹ் முஸ்தபா ஜும்மாப் பள்ளிவாசல் வரை நடைபவனியாக இடம் பெற்றது.

1 COMMENT

  1. இரண்டு பாரிய வித்தியாசங்கள் வரவேற்கத்தக்க வாங்கும்.

    1. செய்கு முஸ்தபா ஜும்மா பள்ளிவாசல் என கூற முற்படுகிறாரகள். தடி எடுத்தவர்கள் எல்லோரும் வேட்டைக்காரன் ஆனாலும் பள்ளிவாசல் என்னும் போது அங்கே கலாச்சாரங்களுக்கு பண்பாடுகளுக்கு முக்கியத்துவம் இல்லை. முஸ்லிம்கள் தொழுகையின் போது தொப்பி அணிவது ஒரு கலாச்சாரமே அன்றி அது கடமை அல்ல பள்ளிவாசலாயின் தொப்பி அணிய வற்புறுத்த முடியாது

    2. 1116 வது கந்தூரியில் தான் மவுலுது என்பது மார்க்கமோ அமல் அல்லது இபாத அல்ல வெறும் பொழுதுபோக்கு மாத்திரம் தான் என்பதை அவர்களும் உணர்ந்து பார்வையாளர்களுக்கு உணர்த்தி உள்ளார்கள்

    ஆடல் பாடல் ஆடை அலங்காரங்களுடன் பாதையிலே மின் விளக்குகளை சோடித்து பவானி வரும் கண்கொள்ளாக் காட்சி இது ஒரு பொழுதுபோக்கு என்பதனை அவர்கள் உணர்ந்துள்ளார்கள் என்பதனை கூற முடிகின்றது அல்ஹம்துலில்லாஹ் சந்தோஷமான விடயம்

    வழி கெட்டவர்களே கவிஞர்களை பின்பற்றுவார்கள் கவிஞர்கள் பொய்யர்கள் பொய்யர்கள் அனைவர் மீதும் சைத்தான்கள் இறங்குகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் இதனை இபாதா என கருதினாலும் நேர்வழியில் உள்ள முஸ்லிம்கள் இதனை ஒரு பொழுதுபோக்காக செய்வதில் எந்த தவறும் இல்லை

Comments are closed.

Popular

More like this
Related

பொலன்னறுவை மும்மொழி தேசிய பாடசாலை நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்!

பொலன்னறுவை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய பல்லின  மற்றும் மும்மொழி தேசிய...

பங்களாதேஷில் உச்சக்கட்ட பதற்றம்: டாக்காவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் திருப்பி அழைப்பு!

தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக புது டெல்லியில் உள்ள பங்களாதேஷ் உயர்...

அனைத்து பாடசாலைகளுக்கும் மீண்டும் விடுமுறை!

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இன்று (23) முதல்...

உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள சீனத் தூதுக்குழு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் உட்பட 11 பேரைக் கொண்ட...