இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

Date:

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர். அதன்படி, சராசரியாக நாளொன்றுக்கு  ஐந்து உயிரிழப்புகள் ஏற்படுவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

நாள்பட்ட சிறுநீரக நோய் (CKD) மற்றும் நீண்டகால சிறுநீரக செயலிழப்பு ஆகியவை சிறுநீர் வெளியேற்றத்தைக் குறைத்து, உடலின் அதிகப்படியான திரவத்தை அகற்ற இயலாமைக்கு வழிவகுக்கும். இதனால் பல சிக்கல்கள் ஏற்படும் என ஆலோசகர் சமூக வைத்தியர் சிந்த குணரத்ன தெரிவித்துள்ளார்.

சிறுநீரக நோய் இரத்த சிவப்பணு உற்பத்தியையும் சீர்குலைக்கிறது. விட்டமின் D அளவைக் குறைக்கிறது மற்றும் இரத்த அழுத்த ஒழுங்குமுறையில் தலையிடுகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) சிறுநீரகம் தொடர்பான நோய்களின் உலகளாவிய அதிகரிப்பு தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார். 10 பேரில் ஒருவருக்கு அவர்களின் வாழ்நாளில் நாள்பட்ட சிறுநீரக நோய் ஏற்படலாம் என மதிப்பிட்டுள்ளது.

2050 ஆம் ஆண்டளவில், சிறுநீரக நோய்கள் உலகளவில் மரணத்திற்கு ஐந்தாவது முக்கிய காரணமாக இருக்கலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் மேலும் கணித்துள்ளது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...