PULSED அமைப்பின் மாணவர் கௌரவிப்பு விழாவில் கலாநிதி ஆஸாத் சிராஸ் அவர்களுக்கு கௌரவம்

Date:

PULSED (Puttalam Union for Literacy, Social and Encouragement Development) அமைப்பின் ஏற்பாட்டில், புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களின் கௌரவிப்பு விழா விமரிசையாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் விசேட அதிதியாக கலந்து கொண்ட மலேசியா சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்று புத்தளம் மற்றும் புத்தளம் ஸாஹிரா கல்லூரிக்கு பெருமை சேர்த்த கலாநிதி ஆஸாத் சிராஸ் அவர்களுக்கு, PULSED அமைப்பின் சார்பில் நினைவுச் சின்னம் வழங்கி சிறப்பு கௌரவம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் உரையாற்றிய கலாநிதி ஆஸாத் சிராஸ் அவர்கள், இவ்வாறான அங்கீகாரமும் மரியாதையும் தமக்குப் பெரும் ஊக்கமாக இருக்கின்றது எனக் குறிப்பிட்டு, PULSED அமைப்புக்கும் நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.

இந்த விழாவின் மற்றொரு சிறப்பாக, PULSED அமைப்பின் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்காக பரிசுகள் வழங்கி அவர்களது வெற்றியை உற்சாகப்படுத்தினர்.

Popular

More like this
Related

வறட்சியான வானிலை காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் – நீர் வடிகாலமைப்பு சபை!

நாட்டில் தற்போது நிலவும் கடுமையான வறட்சியான வானிலை காரணமாக, நீர்த்தேக்கங்களின் நீர்...

தனது தந்தையை விடுவிக்கக் கோரி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மகன் உருக்கமான வேண்டுகோள்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மகன் காசிம் கான், தனது...

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து கலந்தாலோசனை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் யுத்த பதற்றங்களுக்கு மத்தியில், இலங்கையின் வெளிநாட்டு...

75 மில்லியன் ரூபாய் இழப்பீட்டை செலுத்த கெஹலியவுக்கு நீதிமன்றம் உத்தரவு!

2022 ஆம் ஆண்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத...