வியத்புர வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகளை கொள்வனவு செய்த எம்.பி.க்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய 2024 டிசம்பர் 31ஆம் திகதி நிலவரப்படி குறித்த திட்டத்தின் கீழ், 29 முன்னாள் எம்.பி.க்கள் அதற்கான விலையில் 25% பணத்தை செலுத்தியுள்ளமை தெரிய வந்துள்ளது.
‘வியத்புர’ வீட்டுத் திட்டத்திலிருந்து வீடுகளை கொள்வனவு செய்ய எம்.பி.க்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை நீக்குவதற்கு தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவை அண்மையில் தீர்மானித்திருந்தது.
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் (Urban Development Authority – UDA) செயற்படுத்தப்படும் வியத்புர வீட்டுத் திட்டம் (Viyathpura) ஒரு சமூக நலத் திட்டமாகச் செயற்படுத்தப்படுகிறது.
இதன் மூலம், வீட்டு உரிமையை மேம்படுத்துவதும், மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதும் இதன் முக்கிய இலக்குகளாகும்.
