வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

Date:

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய  இஸ்லாமிய கலை விழாவொன்று கடந்த மாதம் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கள்-எலிய அலிகார் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

வரம்பு வரையறைகள் அற்ற நவீன கலைக் கலாசாரத்தின் காரணமாக முஸ்லிம்கள் கலைகளை விட்டும் தூரப்பட்டு நிற்கும் ஒரு காலத்தில், ஊர் மட்டத்தில் கலையார்வமிக்கவர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் வகையிலும், கலைகள், வாசிப்பு, எழுத்து ஆகிய விடயங்களில் ஆர்வம் காட்டாத புதிய பரம்பரையினருக்கு நல்லதொரு தூண்டுதலாகவும் கள்-எலிய கலை விழா அமைந்திருந்தது.

ஊர் மாணவர்கள் மற்றும் பெரியவர்கள், பெண்கள் ஆகியோரின் கஸீதா, இஸ்லாமிய கீதங்கள், நாடகம் மற்றும் மீலாத் கவியரங்கு என்று அனைவரும் ரசிக்கும் வகையில் கலை விழாவின் நிகழ்ச்சி நிரல் அமையப்பெற்றிருந்தது.

மேலும் நிகழ்வின் சிறப்பு அம்சமாக கவிஞர் புத்தளம் மரிக்கார், கவிஞர் கிண்ணியா அமீர் அலி ஆகியோரின் கவிதைகளும் இடம்பெற்றன.

அத்தோடு ‘நபிகளார் வென்ற மண்ணும் மனங்களும்’ என்ற கவிதைத் தொகுப்பும் நூல் ஒன்றும் இக்கலைவிழாவில் வெளியிடப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.

ஊர் பள்ளிவாசல் மற்றும் பாடசாலை, உம்மஹாத் பெண்கள் அமைப்பு, தரீகுல் ஜன்னா இளைஞர் அமைப்பு, முநயெடநசவ செய்திச் சேவை என்பவற்றின் ஒத்துழைப்போடும் ஊர் மக்களின் பூரண ஆதரவோடும் கள்-எலிய அல்-அப்ரார் நிறுவனம் இந்நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்தியது.

இரவு நேர மின்னொளி வெளிச்சத்தில் முழு ஊரையும் ஒன்றுகூட்டிய இந்நிகழ்வு ஏனைய முஸ்லிம் ஊர்களுக்கும் இஸ்லாமிய கலைவிழாவொன்றை செய்வதற்குரிய நல்லதொரு முன்மாதிரியாகும்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...