தாஜுதீனின் கொலை குறித்து புதிய கோணத்தில் விசாரணை

Date:

றக்பி வீரரான வசீம் தஜுதீனின் மரணம் தொடர்பில் புதிய விசாரணைகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும்  மூலப்பொருட்களைக் கொண்ட இராசயனக் கொள்கலன்கள் இரண்டு  நிலத்துக்குள் புதைக்கப்பட்ட விடயத்தில் சம்பத் மனம்பேரி  கைது செய்யப்பட்டு  90 நாட்கள்  தடுப்புக்காவலில்  வைத்து  விசாரணைகள்  முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்த விசாரணைகளின் அடிப்படையில் தான் வசீம் தாஜுதீனின் கொலை  சம்பந்தமான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் குறித்த கொலை சம்பந்தமாக புதிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை வேட்டையாடுவதற்காக வசீம் தாஜுதீனின்  கொலை சம்பந்தமாக விசாரணைகளை முன்னெடுக்கவில்லை.

கொலை சம்பந்தமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அதன்பின்னர்  அதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்படும்.

கொலையுடன் தொடர்புடையவர்களுக்கே தற்போது அதன் உண்மை தெரியும் எனத் தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

பிலிப்பைன்சின் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு பிரதமர் விஜயம்

பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய...

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் அதிகரிப்பு

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் நேற்று (11) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்...

இன்று கிடைக்கப்பெறும் அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு...

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (12) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்...