திடீர் மரண விசாரணை அதிகாரிகளின் பதவியை வலுப்படுத்தி நீதவான் நீதிமன்றங்களை மேலும் சுமைப்படுத்துவதைத் தவிர்க்குமாறு தேசிய ஷூரா சபை வேண்டுகோள்

Date:

இலங்கையிலுள்ள முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளின் உயர்மட்ட அமைப்பான தேசிய ஷூரா சபை (NSC), தற்போது நடைமுறையில் உள்ள திடீர் மரணங்கள் குறித்து திடீர் மரண விசாரணை அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் மரண விசாரணைகளை நீதித்துறைக்கு சுமத்தி, ஏற்கனவே நெருக்கடியான பணிச்சுமையில் உள்ள நீதவான்   நீதிமன்றங்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கவேண்டாம் என நீதியமைச்சர் ஹர்ஷ நானாயக்காரவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 370(3) இன் கீழ்,  குற்றவியல் உட்பட குற்றம் கவனக்குறைவு பற்றிய நியாயமான சந்தேகம் உள்ள சந்தர்ப்பங்களில் மாத்திரம் நீதவான் நீதிமன்றங்களை மரண விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நடைமுறை தொடர வேண்டும் எனவும் திடீர் மரண விசாரணை அதிகாரிகளாளின் பணிச்சுமையை நீதவான் நீதிமன்றங்களின் மீது திணிக்க வேண்டாம் என தேசிய ஷூரா சபை தெளிவுபடுத்தியுள்ளது.

சட்டத்தை மக்கள் இலகுவானதாகவும், பொதுமக்களுக்கு செலவு குறைந்ததாகவும், நீண்டகால சட்ட தாமதங்களைக் குறைப்பதான நீதி அமைச்சின் முயற்சிகளை வரவேற்பதாக 2025 அக்டோபர் 5ஆம் தேதியிட்ட அமைச்சருக்கான தேசிய ஷூரா சபையின் கடிதம் குறிப்பிடுகிறது.

இருப்பினும், பரிந்துரைக்கப்படவிருக்கும் சில புதிய திட்டங்கள் சட்ட தாமதங்களுக்கு மேலும் வழிவகுக்கும் என்றும், அத்துடன் நீதிமன்றங்கள் மூலமான பிரேத விடுவிப்பு நடைமுறையானது துயரத்தில் உள்ள குடும்பங்களுக்கு அதிக செலவை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

99% திடீர் மரணங்கல் இயல்பான மரணங்களாகவே கடந்தகால புள்ளிவிபரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

எனவே, சந்தேகிக்குபடும்படியான 1%க்கும் குறைவான மரணங்களின் விதிவிலக்கான வழக்குகளுக்கு மாத்திரமே தேவைப்படும் நீதவான் நீதிமன்ற விசாரணைகள் மற்றும் பிரேதப் பரிசோதனைகள்(Post Mortems) இந்த 99% ஆனவர்களும் உட்படுத்தப்படுவது நியாயமற்றது.

மேலும் இவ்வாறான புதிய சட்டதிட்டங்கள் நடைமுறையில் உள்ள இலகுவான நடைமுறைமையை விட  மேலும் கடினமாக்குவதுடன் துயரத்தில் உள்ள குடும்பங்களை மேலும் சிரமம்படுதுகின்றது.

குறிப்பாக முஸ்லிம்களின் ஜனாஸா நல்லடக்க செயற்பாடுகளில் மேலும் பதிப்படையச்செய்யும் என தேசிய ஷூரா சபை கவலையை தெரிவித்துள்ளது.

பிரேதப் பரிசோதனைகள் அரசாங்கத்திற்கு அதிகபட்ச கூடுதல் நிதியைச் செலவழிக்கின்றன, அத்துடன் துயரத்திலுள்ள குடும்பங்களுக்கும் கூடுதல் செலவுகளை ஏற்படுத்துகின்றன.

இறந்த மனித உடல்களுக்கும் சர்வதேச சட்டங்கள் மற்றும் வழக்கமான மத நடைமுறைகளின் கீழ் மரியாதை மற்றும் கண்ணியம் அவசியம்.

எல்லா மதங்களும் இறந்தவர்களுக்கு கண்ணியமான இறுதிச் சடங்குகளை வலியுறுத்துகின்றன.

எனவே, அரசாங்கம் நீதவான் நீதிமன்றங்களை மேலும் சுமைப்படுத்தாமல், மாறாக திடீர் மரண விசாரணை அதிகாரிகளை தொழிலாளர் பிணக்குகள் சபையின் ஆணையளர்ககுளுக்கு இணையான வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும்.

அத்துடன், புதிய நியமனங்களுக்கு நியாயமான ஊதியத்துடன் கூடிய கல்வித் தகமைகளை கொண்டவர்வர்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

அரசாங்கத்தின் வாக்குறுதிக்கேற்ப, தற்போதுள்ள சட்டங்களில் மாற்றங்கள் சட்ட தாமதங்களைக் குறைத்து, செயல்முறையைச் செலவு குறைந்ததாகவும், திடீர் மரண விசாரணை அதிகாரிகளை அமைப்பை மக்கள் நம்பக்கூடியதாக மாற்ற வேண்டும் என்று தேசிய ஷூரா சபையின் தலைவர் எம்.எம். ஸுஹைர் ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் பொதுச் செயலாளர் ரஷீத் எம். இம்தியாஸ் (சட்டத்தரணி) ஆகியோர் இணைந்து வெளியிட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சுவசெரிய படையணியை 500 ஆக உயர்த்த அரசாங்கம் திட்டம்

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுவசெரிய அம்பியூலன்ஸ்  வண்டி படையணியை 500 ஆக...

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: முஸ்லிம் மக்கள் அதிகம்கொண்ட தொகுதிகளையும் கைப்பற்றுகிறதா தேசிய ஜனநாயகக் கூட்டணி?

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முன்னிலை நிலவரங்கள் வெளியாகி...

இஸ்ரேலில் இலங்கை தொழிலாளர் ஒருவர் உயிரிழப்பு!

இஸ்ரேலில் 38 வயதான இலங்கை தொழிலாளர் ஒருவர் வியாழக்கிழமை (13) இரவு...

புதிய கல்வி சீர்திருத்தங்கள்: வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள்!

பாடசாலை நேரத்தை பிற்பகல் 2:00 மணி வரை நீட்டிப்பது உட்பட அரசாங்கத்தின்...