இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது!

Date:

இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதாகவும், இதில் 70 சதவீதம் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இன்றைய (07) நாடாளுமன்ற அமர்வின் போது கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சரிடம், நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ரத்னசிறி கேள்வி எழுப்பிய போதே இந்தத் தகவல் தெரியவந்தது.

ஆண்டுதோறும் பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்பான விடயங்களைக் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, இதன்போது முன்வைத்தார்.

அதன்படி, ஆண்டுதோறும் 20 மில்லியன் தொன் தயிர் சட்டிகளும், 15 மில்லியன் தொன் லஞ்ச் ஷீட்களும், 20 மில்லியன் தொன் பொலித்தீன் பைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீனில் சுமார் 70 சதவீதம் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படுவதால், ஆண்டுதோறும் அதிக அளவு பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் சுற்றுச்சூழலில் வெளியிடப்படுவதாகவும் இதனால் அவற்றைக் குறைப்பதில் அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாகவும்” பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியினால் தீர்வு

சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும்,...

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...