கொழும்பின் பல பகுதிகளில் 10 மணிநேர நீர்வெட்டு.

Date:

கொழும்பு 01 முதல் 15 வரை பல பகுதிகளுக்கு நாளைய தினம் (23) நீர் விநியோகம் தடைப்படும் என்று நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாளை (23) காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 10 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீரைப் பெறும் பிரதான பம்பிங் நிலையத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்படுவதால், பத்தரமுல்லை, பெலவத்த, ஹோகந்தர, கொஸ்வத்த, தலவதுகொட, கோட்டே, ராஜகிரிய, மடிவெல, நுகேகொட, நாவல கொலன்னாவ, ஐடிஹெச் கொட்டிகாவத்த, அங்கொட வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்த, மஹரகம, பொரலஸ்கமுவ ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...