வெலிகம பிரதேச சபைத் தலைவர் துப்பாக்கிச் சூடு; சந்தேக நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் – பொது பாதுகாப்பு அமைச்சர்

Date:

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று (23) உரையாற்றும் போதே பொது பாதுகாப்பு அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த உடனேயே, அது குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு பொலிஸ்மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

விசாரணைக்காக 04 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டதாகவும், சந்தேக நபர்கள் குறித்த தகவல்கள் தற்போது கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

கொலையில் தொடர்புடைய அனைத்து சந்தேக நபர்களும் அடுத்த 02 முதல் 03 நாட்களுக்குள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

மீண்டும் வழமைக்குத் திரும்பும் ரயில் சேவைகள்!

திட்வா புயல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு...

இஸ்லாமிய இலக்கியம்: அரபு எண்களின் தோற்றமும் பரவலும்!

-பொறியாளர் எஸ்.எம்.எம். ரிஃபாய் மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நாளிலும் எண்கள் தவிர்க்க முடியாதவை....

போதைப்பொருள் பாவனையாளர்களைக் கண்டறிய இன்று முதல் புதிய முறை!

போதைப்பொருள் பயன்படுத்தும் சாரதிகளைக் கண்டறியும் உமிழ்நீர் பரிசோதனை இன்று (17) முதல்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை.

இன்றையதினம் (17) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரண்ட வானிலை நிலவும்...