தாஜுதீனின் கொலை குறித்து புதிய கோணத்தில் விசாரணை

Date:

றக்பி வீரரான வசீம் தஜுதீனின் மரணம் தொடர்பில் புதிய விசாரணைகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும்  மூலப்பொருட்களைக் கொண்ட இராசயனக் கொள்கலன்கள் இரண்டு  நிலத்துக்குள் புதைக்கப்பட்ட விடயத்தில் சம்பத் மனம்பேரி  கைது செய்யப்பட்டு  90 நாட்கள்  தடுப்புக்காவலில்  வைத்து  விசாரணைகள்  முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்த விசாரணைகளின் அடிப்படையில் தான் வசீம் தாஜுதீனின் கொலை  சம்பந்தமான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் குறித்த கொலை சம்பந்தமாக புதிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை வேட்டையாடுவதற்காக வசீம் தாஜுதீனின்  கொலை சம்பந்தமாக விசாரணைகளை முன்னெடுக்கவில்லை.

கொலை சம்பந்தமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அதன்பின்னர்  அதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்படும்.

கொலையுடன் தொடர்புடையவர்களுக்கே தற்போது அதன் உண்மை தெரியும் எனத் தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியினால் தீர்வு

சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும்,...

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...