தாஜுதீனின் கொலை குறித்து புதிய கோணத்தில் விசாரணை

Date:

றக்பி வீரரான வசீம் தஜுதீனின் மரணம் தொடர்பில் புதிய விசாரணைகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும்  மூலப்பொருட்களைக் கொண்ட இராசயனக் கொள்கலன்கள் இரண்டு  நிலத்துக்குள் புதைக்கப்பட்ட விடயத்தில் சம்பத் மனம்பேரி  கைது செய்யப்பட்டு  90 நாட்கள்  தடுப்புக்காவலில்  வைத்து  விசாரணைகள்  முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்த விசாரணைகளின் அடிப்படையில் தான் வசீம் தாஜுதீனின் கொலை  சம்பந்தமான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் குறித்த கொலை சம்பந்தமாக புதிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை வேட்டையாடுவதற்காக வசீம் தாஜுதீனின்  கொலை சம்பந்தமாக விசாரணைகளை முன்னெடுக்கவில்லை.

கொலை சம்பந்தமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அதன்பின்னர்  அதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்படும்.

கொலையுடன் தொடர்புடையவர்களுக்கே தற்போது அதன் உண்மை தெரியும் எனத் தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்வதற்காக, முடிந்தவரை...

நெதன்யாகு எங்கே? இஸ்ரேல் பிரதமர் குறித்து பரவும் மர்மம்: ஈரான் ஊடகம் எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிரிழந்திருக்கலாம் அல்லது படுகாயமடைந்திருக்கலாம் என்ற யூகங்கள்...

பல்துறை அறிஞர் பேராசிரியர் நகீப் அத்தாஸ் மறைந்தார்.!

பொதுவாக அறிவுலகத்திற்கும், உலக முஸ்லிம் சமூகத்திற்கும் பெரும் அறிவுப் பங்களிப்பை வழங்கிய...

வாகன இலக்கத் தகடு : புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து

மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியைப் புதிய நிறுவனமொன்றிடம் ஒப்படைப்பதற்கான...