விடியல் இணையத்தள பிரதம ஆசிரியர் றிப்தி அலிக்கு ஜனாதிபதி சுற்றாடல் வெள்ளி விருது

Date:

விடியல் இணையத்தள பிரதம ஆசிரியர் றிப்தி அலிக்கு மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் ஜனாதிபதி சுற்றாடல் வெள்ளி விருது வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் ஜனாதிபதி சுற்றாடல் விருது விழா இன்று (23) வியாழக்கிழமை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் அமைச்சர்களான தம்மிக்க பட்டபெந்தி, சுனில் ஹந்துன்னெத்தி, சுற்றாடல் பிரதி அமைச்சர் அண்டன் ஜயகொடி மற்றும் சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் திலக் ஹேவாவசம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

சுயாதீன ஊடகவியலாளராக தமிழன் பத்திரிகையில் இவர் தொடர்ச்சியாக எழுதி வருகின்ற சுற்றாடல் கட்டுரைகளுக்காகவே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் கடந்த வருடமும் ஊடகவியலாளர் றிப்தி அலிக்கு ஜனாதிபதி சுற்றாடல் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...