வெலிகம பிரதேச சபைத் தலைவர் துப்பாக்கிச் சூடு; சந்தேக நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் – பொது பாதுகாப்பு அமைச்சர்

Date:

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று (23) உரையாற்றும் போதே பொது பாதுகாப்பு அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த உடனேயே, அது குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு பொலிஸ்மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

விசாரணைக்காக 04 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டதாகவும், சந்தேக நபர்கள் குறித்த தகவல்கள் தற்போது கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

கொலையில் தொடர்புடைய அனைத்து சந்தேக நபர்களும் அடுத்த 02 முதல் 03 நாட்களுக்குள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக நான்கு இலங்கையர்கள் காயம்!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக மொத்தம் நான்கு இலங்கையர்கள்...

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...