றக்பி வீரரான வசீம் தஜுதீனின் மரணம் தொடர்பில் புதிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களைக் கொண்ட இராசயனக் கொள்கலன்கள் இரண்டு நிலத்துக்குள் புதைக்கப்பட்ட விடயத்தில் சம்பத் மனம்பேரி கைது செய்யப்பட்டு 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கொலை சம்பந்தமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அதன்பின்னர் அதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
கொலையுடன் தொடர்புடையவர்களுக்கே தற்போது அதன் உண்மை தெரியும் எனத் தெரிவித்துள்ளார்.