இஸ்ரேல் – காசா போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நேற்று எகிப்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையில் நடந்த காசா அமைதி கூட்டத்தில் போர் நிறுத்தத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட உலக நாடுகளின் தலைவர்களும் கையெழுத்திட்டனர்.
கடந்த 29ஆம் திகதி இஸ்ரேல் – காசா போர் நிறுத்தத்திற்கான 20 அம்சங்களை ட்ரம்ப் பரிந்துரைத்தார். அதை அன்றே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒப்புக்கொண்டார்.
அந்த வாரத்தின் வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 3), ஹமாஸும் ட்ரம்ப் பரிந்துரைத்த ஒரு சில அம்சங்களை ஒப்புக்கொண்டது. மற்றவற்றைக் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று கேட்டது.
அதற்கேற்ற மாதிரி, கடந்த வாரம், எகிப்தில் இஸ்ரேல், காசா தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில் அனைவரும் உடன்பட, நேற்று இரு நாடுகளும் தாங்கள் பிடித்து வைத்திருந்த பணயக் கைதிகளை விடுவித்தன. இதனையடுத்து நேற்று வெற்றிகரமாக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் உள்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தலைமையில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே இன்று இந்த அமைதி ஒப்பந்தமானது கையெழுத்தாகி உள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து இஸ்ரேல் – காசா இடையே போர் மூண்டு நடந்து வருகிறது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த போரால் ஆயிரக்கணக்கானவர்கள் பலியாகினர்.
காசா நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலர் வாழ்வாதாரத்தை இழந்து கடும் இன்னல்களை சந்தித்துள்ளனர்.
அந்த வகையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே அமைதி ஒப்பந்தமானது கையெழுத்தாகி உள்ளது.
இதன் மூலமாக கடந்த இரண்டு ஆண்டுகாலமாக நடந்து வந்த போர் முடிவுக்கு வந்து அமைதி பிறந்துள்ளது.