சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

Date:

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய பின்னர் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எல் – பாஷர் நகரை, சூடான் இராணுவத்திடம் இருந்து, ஆர்.எஸ்.எப். குழு அண்மையில்  கைப்பற்றியதைத் தொடர்ந்து இக்குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் எல் பாஷர் நகரில் மனித உரிமை மீறல்கள் பெரிதும் ஏற்பட்டுள்ளதாக பல சர்வதேச அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

சூடானில், சக்திவாய்ந்த இரு இராணுவ தலைமைகளுக்கு இடையிலான அதிகாரப் போட்டியின் விளைவால் உள்நாட்டு போர் நடந்து வருவது தெரிந்ததே.

சூடானின் அதிகாரப்பூர்வ இராணுவ தலைவரான ஜெனரல் அப்தெல் பத்தாஹ் அல் பூர்ஹான் தலைமையில் எஸ்.ஏ.எப், எனும் சூடான் ஆயுத படைகள் அமைப்பு செயல்பட்டு வருகிறது.

டர்பூரில் இனப்படுகொலை செய்த ஜன்ஜாவித் போராளிக் குழுவைச் சேர்ந்த ஜெனரல் முகமத் ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆர்.எஸ்.எப்., எனும் துணை இராணுவ விரைவு படைகள் செயல்பட்டு வருகின்றன.

நீண்டகாலமாக சர்வாதிகாரியாக இருந்த ஓமர் அல் பஷீரை, 2019ல் ஆட்சியில் இருந்து அகற்றியதில் இரு பிரிவினரும் இணைந்து முக்கிய பங்கு வகித்தமை தெரிந்ததே.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...