பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தை பாதிக்கப்பட்டுள்ள 3,000 மக்களுக்கு தங்குமிடமாக மற்றுவதற்கு நடவடிக்கை

Date:

கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தை பேரிடரினால் பாதிக்கப்பட்டுள்ள 3,000 மக்களுக்கு தங்குமிடம் மற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பிராந்திய மேம்பாட்டுக் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் பாதகமான வானிலை குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு இடமளிக்க மைதானம் நிவாரண பேரிடர் மையமாக மாற்றப்பட்டு வருவதாக ஊடகங்களிடம் உரையாற்றும் போது பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல ஹே தெரிவித்தார்.

வடக்கு கொழும்பு, கடுவலை மற்றும் கொலன்னாவ உள்ளிட்ட கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அவர் வலியுறுத்தினார்.

பாதிக்கப்பட்ட சமூகங்களை ஆதரிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.

இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு மேலதிக தங்குமிடம் மற்றும் நிவாரண சேவைகளை வழங்குவதற்காக பாடசாலைகள் மற்றும் மத நிறுவனங்களை தற்காலிக தங்குமிடங்களாக மாற்றுவதற்கும் தற்காலிக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

கொழும்பில் நாளை இடம்பெறவுள்ள ‘அல் அகீதா அஸ் – ஸஹீஹா’ நூல் வெளியீட்டு மாநாடு!

இலங்கையிலுள்ள பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞர்களில் ஒருவரான அல்-ஆலிம் சி.ஐ.எம். அஸ்மீர்...

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதித்து...

இன்று நடைபெறுகின்ற புத்தளம் பெரிய பள்ளிவாசல் தர்ம கர்த்தா சபை நியமனம் தொடர்பில் முறைப்பாடு

(குறிப்பு: புத்தளம் பெரிய பள்ளிவாசலுடைய நிர்வாக சபை தெரிவு இன்று மாலையில்...

இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் வீதி விபத்துக்கள்: பொலிஸார் எச்சரிக்கை!

அதிவேகம் மற்றும் கவனயீனமாக வாகனம் ஓட்டுதல் தொடர்பான விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து...