பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தை பாதிக்கப்பட்டுள்ள 3,000 மக்களுக்கு தங்குமிடமாக மற்றுவதற்கு நடவடிக்கை

Date:

கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தை பேரிடரினால் பாதிக்கப்பட்டுள்ள 3,000 மக்களுக்கு தங்குமிடம் மற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பிராந்திய மேம்பாட்டுக் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் பாதகமான வானிலை குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு இடமளிக்க மைதானம் நிவாரண பேரிடர் மையமாக மாற்றப்பட்டு வருவதாக ஊடகங்களிடம் உரையாற்றும் போது பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல ஹே தெரிவித்தார்.

வடக்கு கொழும்பு, கடுவலை மற்றும் கொலன்னாவ உள்ளிட்ட கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அவர் வலியுறுத்தினார்.

பாதிக்கப்பட்ட சமூகங்களை ஆதரிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.

இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு மேலதிக தங்குமிடம் மற்றும் நிவாரண சேவைகளை வழங்குவதற்காக பாடசாலைகள் மற்றும் மத நிறுவனங்களை தற்காலிக தங்குமிடங்களாக மாற்றுவதற்கும் தற்காலிக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...