பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தை பாதிக்கப்பட்டுள்ள 3,000 மக்களுக்கு தங்குமிடமாக மற்றுவதற்கு நடவடிக்கை

Date:

கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தை பேரிடரினால் பாதிக்கப்பட்டுள்ள 3,000 மக்களுக்கு தங்குமிடம் மற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பிராந்திய மேம்பாட்டுக் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் பாதகமான வானிலை குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு இடமளிக்க மைதானம் நிவாரண பேரிடர் மையமாக மாற்றப்பட்டு வருவதாக ஊடகங்களிடம் உரையாற்றும் போது பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல ஹே தெரிவித்தார்.

வடக்கு கொழும்பு, கடுவலை மற்றும் கொலன்னாவ உள்ளிட்ட கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அவர் வலியுறுத்தினார்.

பாதிக்கப்பட்ட சமூகங்களை ஆதரிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.

இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு மேலதிக தங்குமிடம் மற்றும் நிவாரண சேவைகளை வழங்குவதற்காக பாடசாலைகள் மற்றும் மத நிறுவனங்களை தற்காலிக தங்குமிடங்களாக மாற்றுவதற்கும் தற்காலிக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

24 மணித்தியாலயத்தில் கொழும்பு நகருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

நீர்ப்பாசனத் திணைக்களம், சமீபத்திய வரலாற்றில் மிகப்பெரிய வெள்ளத்தால் அடுத்த 24 மணி...

களனி ஆற்றை அண்மித்து பாரிய வெள்ளம்

களனி கங்கை பெருக்கெடுத்துள்ளதால் அதனை அண்மித்த பகுதிகளில் வரலாற்றில் என்றுமில்லாதளவிற்கு வெள்ள...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் குறித்து அச்சம் வேண்டாம்.

தொடர்ந்து நிலவக்கூடிய வானிலை நிலைமையை கருத்தில் கொண்டு, க.பொ.த. உயர்தரப் பரீட்சை...

பேராதனைப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது

தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாகப் பேராதனைப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல்...