இலங்கையில் அடுத்த சில நாட்களுக்குக் கனமழை எதிர்பார்ப்பு

Date:

இலங்கையில் அடுத்த சில நாட்களுக்கு, குறிப்பாக பெப்ரவரி 10 வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தமிழகத்தைச் சேர்ந்த வானிலை முன்னறிவிப்பாளர் செல்வக்குமார் தன் யூடியூப் தளத்தில் தெரிவித்தார்.

செல்வக்குமார் கூறியதாவது, வங்காள விரிகுடாவில் காணப்படும் வளிமண்டல மேகம் இந்த வாரம் ஒரு புயலாக வலுப்பெறக்கூடும். இதனால், பொதுமக்கள் மற்றும் பிராந்திய அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

புயல் படிப்படியாக மேற்கு நோக்கி நகரும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். புயலாக மாறினாலும் மாறாவிட்டாலும், இலங்கையின் சில பகுதிகளில் இடையிடையே நிலையின்மையுடனான கனமழை பெய்யும். குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் மற்றும் கடலோர நகரங்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் என அவர் எச்சரித்துள்ளார்.

 நவம்பர் மாதக் கடைசியில் வந்த புயலையும் செல்வக்குமார், முன்னறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஹஜ் 2026: இலங்கை யாத்திரிகர்களின் நலன்களை ஆராய சவூதி சென்றடைந்தார் பிரதி அமைச்சர் முனீர் முலப்பர்!

இலங்கையின் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் பிரதி அமைச்சரும், ஹஜ் தூதுவருமான கௌரவ...

தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகருடன் H. அப்துர் ரகீப் அவர்கள் நேரில் சந்திப்பு: இஸ்லாமிய நூல்கள் அன்பளிப்பு!

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவரும், தற்போதைய மத்திய...

மூளைக்காய்ச்சல் குறித்து பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

தெனியாய பகுதியில் உள்ள சில பாடசாலைகளில் பதிவாகியிருந்த மூளைக்காய்ச்சல் நோய், தற்போது...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு தன்சல் வழங்குவோருக்கான அறிவிப்பு!

எதிர்வரும் வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் நடத்துவதற்காக இதுவரையில்...