பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!

Date:

மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி,தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கொழும்பு மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் மின்னல் தாக்கத்துடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையானது இன்று திங்கட்கிழமை (08) பிற்பகல் 11.00 மணி முதல் அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Popular

More like this
Related

அவர்களுக்கு ரொட்டியையும் பொழுதுபோக்கு அம்சங்களையும் கொடுங்கள்: உலகக் கோப்பை குறித்த ஓர் அழகிய சிந்தனை

-நூஹ் மஹ்ழரி (தமிழ்நாடு) உலகக் கோப்பை கால்பந்தாட்ட காய்ச்சல் உலகம் முழுவதும் பற்றி...

பாலின மாற்று சுற்றறிக்கைக்கு எதிரான அடிப்படை உரிமை மனுவை நிராகரித்தது உயர் நீதிமன்றம்!

பெண்களும் ஆண்களும் தங்கள் பாலினத்தை மாற்றிக்கொள்ள அனுமதிக்கும் சுற்றறிக்கைகளைச் செல்லாததாக்கக் கோரித்...

செப்டம்பர் முதல் அனைத்து வாகனங்களும் தரம் பரிசோதிக்கப்படும்!

பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபடும் பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களினதும் தரத்தைப்...

அதிகரிக்கும் டெங்கு பரவல்: நாடு முழுவதும் 76, 000-ஐ கடந்த பாதிப்புகள்

நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 76,000 ஐ கடந்துள்ளதாக தேசிய...