இலங்கையில் அடுத்த சில நாட்களுக்குக் கனமழை எதிர்பார்ப்பு

Date:

இலங்கையில் அடுத்த சில நாட்களுக்கு, குறிப்பாக பெப்ரவரி 10 வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தமிழகத்தைச் சேர்ந்த வானிலை முன்னறிவிப்பாளர் செல்வக்குமார் தன் யூடியூப் தளத்தில் தெரிவித்தார்.

செல்வக்குமார் கூறியதாவது, வங்காள விரிகுடாவில் காணப்படும் வளிமண்டல மேகம் இந்த வாரம் ஒரு புயலாக வலுப்பெறக்கூடும். இதனால், பொதுமக்கள் மற்றும் பிராந்திய அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

புயல் படிப்படியாக மேற்கு நோக்கி நகரும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். புயலாக மாறினாலும் மாறாவிட்டாலும், இலங்கையின் சில பகுதிகளில் இடையிடையே நிலையின்மையுடனான கனமழை பெய்யும். குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் மற்றும் கடலோர நகரங்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் என அவர் எச்சரித்துள்ளார்.

 நவம்பர் மாதக் கடைசியில் வந்த புயலையும் செல்வக்குமார், முன்னறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அவர்களுக்கு ரொட்டியையும் பொழுதுபோக்கு அம்சங்களையும் கொடுங்கள்: உலகக் கோப்பை குறித்த ஓர் அழகிய சிந்தனை

-நூஹ் மஹ்ழரி (தமிழ்நாடு) உலகக் கோப்பை கால்பந்தாட்ட காய்ச்சல் உலகம் முழுவதும் பற்றி...

பாலின மாற்று சுற்றறிக்கைக்கு எதிரான அடிப்படை உரிமை மனுவை நிராகரித்தது உயர் நீதிமன்றம்!

பெண்களும் ஆண்களும் தங்கள் பாலினத்தை மாற்றிக்கொள்ள அனுமதிக்கும் சுற்றறிக்கைகளைச் செல்லாததாக்கக் கோரித்...

செப்டம்பர் முதல் அனைத்து வாகனங்களும் தரம் பரிசோதிக்கப்படும்!

பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபடும் பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களினதும் தரத்தைப்...

அதிகரிக்கும் டெங்கு பரவல்: நாடு முழுவதும் 76, 000-ஐ கடந்த பாதிப்புகள்

நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 76,000 ஐ கடந்துள்ளதாக தேசிய...