கொழும்பு ரிட்ஜ்வே வைத்தியசாலையில் ‘ஓட்டிசம்’ அலகை மேம்படுத்த ரூ. 398.09 மில்லியன் ஒதுக்கீடு!

Date:

கொழும்பு சீமாட்டி றிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் முழுமையான வசதிகளுடனான மனவளர்ச்சி குன்றிய (ஓட்டிசம்) மற்றும் நரம்பு விருத்தி அலகை விரிவாக்குதல் மற்றும் அபிவிருத்தி செய்தல்.

2025 வரவுசெலவு திட்ட முன்மொழிவுக்கு ஏற்ப சர்வதேச தராதரங்களுக்கு ஏற்ற வகையில் ஓட்டிசம் உள்ளிட்ட நரம்பு விருத்தி இயலாமைக்குட்பட்ட பிள்ளைகளுக்கான சிகிச்சை நிலையத்தை கொழும்பு சீமாட்டி றிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் நிறுவுவதற்காக முன்னுரிமை வழங்குவதற்கு 2025-10-21 திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

மேற்குறித்த திட்டத்தின் மொத்த மதிப்பீட்டுச் செலவு ரூபா 398.09 மில்லியன்களாகும். உத்தேச திட்டத்தை அமுல்படுத்துவதற்காக தேசிய திட்டமிடல் திணைக்களம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய, மேற்குறித்த திட்டத்தை அமுல்படுத்தவதற்கு தேவையான நிதி மத்திய கால வரவுசெலவு சட்டகத்திற்குள் ஏற்பாடு செய்து திட்டத்தை அமுல்படுத்துவதற்காக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

பாகிஸ்தானிலிருந்து மேலும் ஒருதொகை நிவாரணம் இலங்கைக்கு கையளிப்பு!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பாகிஸ்தான் அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட மனிதாபிமான...

தஃவா அமைப்புக்களை பரஸ்பரம் புரிந்துகொள்ள வைப்பதில் பங்காற்றிவரும் அனர்த்த நிவாரணப்பணிகள்

அண்மையில் ஏற்பட்ட டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கம்பளை மற்றும் கெலிஓயா...

அவுஸ்திரேலியாவின் துப்பாக்கிச் சூடு குறித்து ஜனாதிபதி அனுர இரங்கல்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி, பொண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 16...

ஹமாஸின் மூத்த தளபதி ரேத் சயீத் காசாவில் படுகொலை!

காசாவில் ஹமாஸின் மூத்த தளபதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்...