ஜெட்டாவுக்கான கொன்சல் ஜெனரலாக முஸ்லிம் அல்லாத ஒருவரின் நியமனம் தற்காலிகமானதே: பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் விளக்கம்!

Date:

வரலாற்றில் முதல் முறையாக, முஸ்லிம் அல்லாத ஒருவரை சவூதி அரேபியாவின் ஜெட்டா கொன்சல் ஜெனரலாக இலங்கை வெளிவிவகார அமைச்சு நியமித்துள்ளமை தொடர்பில் முஸ்லிம் சமூகத்தில் பல்வேறு கருத்துகளும் விவாதங்களும் எழுந்துள்ளன.

முன்னதாக, ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரைகளுடன் தொடர்புடைய நிர்வாக நடவடிக்கைகளை திறம்பட மேற்கொள்ளும் நோக்கிலும் புனித பிரதேசங்களில் அக்கடமைகள் தொடர்பான விடயங்களை நேரடியாக மேற்பார்வை செய்யும் நோக்கிலும் இஸ்லாம் மதம் மற்றும் அதன் நடைமுறைகள் குறித்த அறிவைக் கொண்ட ஒரு முஸ்லிம் தூதரை ஜெட்டா கொன்சல் ஜெனரல் ஒருவரே நியமிக்கப்பட்டு வந்தார்.

அந்தப் பொறுப்பில் இருந்து சேவை புரிந்த முன்னாள் கொன்சல் ஜெனரல் ஷேக் நயீமுதீன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் பதவியின் கீழ், மக்கா மற்றும் மதீனா ஆகிய புனித நகரங்களுக்கு அதிகாரப்பூர்வ வருகைகள் உள்ளிட்ட முக்கிய பணிகள் இடம்பெறுகின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக ‘நியூஸ்நவ்’ மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் முனீர் முலாஃபரிடம் விளக்கம் கேட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர், தற்போதைய நியமனம் தற்காலிகமானது என தெரிவித்தார்.

மேலும்,  இந்தப் பொறுப்புக்காக தகுதியான ஒரு முஸ்லிம் நபர் நியமிக்கப்படும் வரை, வெளியுறவு அமைச்சக அதிகாரியான சேனநாயக்க தற்காலிகமாக ஜெட்டா கொன்சல் ஜெனரல் பதவியை வகிப்பார் என்றும் அமைச்சர் கூறினார்.

Popular

More like this
Related

தனது நாட்டின் அனைத்து வங்கிகளிலும் வட்டி சார்ந்த கொடுக்கல் வாங்கல்களை முழுமையான நிறுத்திய ஆப்கானிஸ்தான்.

ஆப்கானிஸ்தானில் பல தசாப்தங்களாக நடைமுறையிலிருந்த வட்டி அடிப்படையிலான வங்கி முறையை அதிகாரப்பூர்வமாக...

முடியும் தறுவாயில் அமெரிக்கா – ஈரான் போர்: டிரம்ப்

அமெரிக்கா - ஈரான் இடையே போர் முடிவுக்கு வரும் தறுவாயில் இருப்பதாக ...

இலங்கையில் தங்கவைக்கப்பட்டிருந்த 236 ஈரான் கடற்படையினர் நாடு திரும்பினர்

இலங்கையின் பாதுகாப்பில் தங்கவைக்கப்பட்டிருந்த ஈரான் கடற்படையைச் சேர்ந்த மொத்தம் 240 வீரர்களும்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின் மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மாகாணங்களிலும்...