நாச்சியாதீவு மக்களுக்கு சிங்கள சகோதரர்களது மனிதாபிமான உதவி

Date:

நூறு வீதம் முஸ்லிம்கள் வாழும் அனுராதபுர மாவட்டத்தின் பெரிய கிராமங்களில் ஒன்றான நாச்சியாதீவில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்காக இன்று அனுராதபுர மாவட்டத்தின் தலாவ மகாவலி H பகுதியைச் சேர்ந்த சிங்கள சகோதரர்கள் 600 உணவுப் பார்சல்களை தயாரித்து எடுத்து வந்து ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார்கள்.

அவர்களை தமது காரியாலயத்தில் வரவேற்ற நிர்வாகிகள் அவர்களுக்கு சிற்றுண்டிகளை வழங்கி கெளரவித்ததுடன் நன்றி தெரிவிப்பதற்காக விசேட கூட்டம் ஒன்றையும் நடத்தி அந்த பார்சல்களை ஊரில் சிறப்பாக பங்கீடு செய்தார்கள்.

இந்த சிங்கள சகோதரர்களது இந்த நடவடிக்கை இன நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இன ரீதியாக சிந்திக்கும் ஒரு சிறு குழுவினர் இந்த நாட்டில் இருப்பது போன்றே மனிதாபிமான அடிப்படையில், இன நல்லுறவை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சிந்திக்கும் சிங்கள சகோதரர்களும் இந்த நாட்டில் வாழுகிறார்கள் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாகும்.

Popular

More like this
Related

தமிழக முதல்வர் விஜய்க்கு இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வாழ்த்து!

புதிய தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அநுர...

உணர்ச்சி பொங்க முதலமைச்சராக பதவியேற்றார் த.வெ.க. தலைவர் விஜய்

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றார். தவெக தலைவர் விஜய்க்கு முதல்வராக...

முதல்வராக விஜய் பதவியேற்பு: சென்னையில் ராகுல் காந்தி!:

தமிழ்நாட்டின் முதல்வராக தவெக தலைவர் விஜய் இன்று(மே 10) பதவியேற்கவுள்ள நிலையில்,...

பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்....