நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சுனாமி நினைவேந்தல் !

Date:

சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 21வது ஆண்டு நினைவை முன்னிட்டு, இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் பல்வேறு இடங்களிலும் நினைவேந்தல்கள் நடைபெற்றன.

சுனாமி பேரழிவு மற்றும் பிற பேரிடர்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

காலியில் உள்ள ‘பேரலிய சுனாமி நினைவிடத்தில்’ இன்று வெள்ளிக்கிழமை (26) காலை 8.30 மணி முதல் 11 மணி வரை விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன, இதில் வாழ்ந்தோரும், குடும்பத்தினரும், பொதுமக்களும் கலந்து கொண்டு அனர்த்த நினைவுகளை நினைவுகூரினர்.

யாழ்ப்பாணம்,திருகோணமலை, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, ஹட்டன், மட்டக்களப்பு, மண்முனை, வவுனியா, தம்பலகாமம், திருகோணமலை உள்ளிட்டபல பகுதிகளிலும் நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் அதிகரிப்பு

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் நேற்று (11) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்...

இன்று கிடைக்கப்பெறும் அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு...

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (12) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்...

2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 18,000 எலிக்காய்ச்சல் சம்பவங்கள் பதிவு

நாட்டில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 13,000 எலிக்காய்ச்சல்...