சிப் அபகஸ் புத்தளம் கிளையைச் சேர்ந்த மாணவர்கள் 52 விருதுகளைத் தம் வசப்படுத்திக் கொண்டனர்.

Date:

-எம்.யூ.எம்.சனூன்

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் அண்மையில் (14) நடைபெற்ற அகில இலங்கை சிப் அபகஸ் தேசிய ப்ராடிஜி போட்டியில் சிப் அபகஸ் புத்தளம் கிளையைச் சேர்ந்த மாணவர்கள் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி, 52 விருதுகளைத் தம் வசப்படுத்திக் கொண்டனர்.

இந்த சிப் அபகஸ் தேசிய ப்ராடிஜி போட்டியில் இலங்கை முழுவதிலிருந்தும் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றிருந்தனர்.

இந்த நிகழ்வை நாடாளுமன்ற துணை சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலிஹ் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்வில் புத்தளம் கிளையின் நிர்வாக இயக்குனர் செயித் அப்கர் தலைமையிலான சிப் அபகஸ் மாணவர்கள் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி இந்த அடைவை பெற்றுள்ளனர்.

புத்தளம் கிளை மாணவர்களின் சாதனைகளுக்கான அங்கீகாரத்தை, துணை சபாநாயகரும் குழுக்களின் தலைவருமான டாக்டர் ரிஸ்வி சாலிஹ் அவர்கள், சிப் அபகஸ் புத்தளம் கிளை நிர்வாக இயக்குனர் சையத் அப்கர் முகமது மில்ஹான் அவர்களுக்கு வழங்கி வைத்தார்.

இந்த அங்கீகாரமானது போட்டியில் பங்கேற்ற மாணவர்களின் அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் சிறப்பை எடுத்துக்காட்டியமை குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் அதிகரிப்பு

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் நேற்று (11) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்...

இன்று கிடைக்கப்பெறும் அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு...

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (12) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்...

2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 18,000 எலிக்காய்ச்சல் சம்பவங்கள் பதிவு

நாட்டில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 13,000 எலிக்காய்ச்சல்...