பேரிடரால் சேதமடைந்த மத ஸ்தலங்களை கட்டியெழுப்ப ஹஜ் குழுவிடமிருந்து ரூ. 5 மில். நன்கொடை

Date:

அண்மையில் ஏற்பட்ட இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட மத ஸ்தலங்களின் மறுசீரமைக்கும் பணிகளுக்காக, ஹஜ் குழுவிடமிருந்து ரூ.5 மில்லியன் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

இன்று (08) முற்பகல் ரூ. 5 மில்லியன் நன்கொடையை புத்தசாசனம், மத மற்றும் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சிடம் ஹஜ் குழு வழங்கியுள்ளது.

இந்த நன்கொடைக்கான காசோலையை ஹஜ் குழு தலைவர், பட்டய கணக்காளர் ரியாஸ் மிஹ்லார், புத்தசாசனம், மத மற்றும் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி மற்றும் மத மற்றும் பண்பாட்டு அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் ஆகியோரிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் முஸ்லிம் மத அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ், ஹஜ் குழு உறுப்பினர் பேராசிரியர் எம்.எஸ்.எம். அஸ்லம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...