பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

Date:

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலை (SLISR) மாணவர்கள் மற்றும் பணிக்குழுவினர், 30,000 ரியால் (அமெரிக்க டொலர் 8,000) நிதியுதவியையும், மேலும் 10,000 ரியால் பெறுமதியான அத்தியாவசிய நிவாரணப் பொருட்களையும் கையளித்தனர்.

இந்த மனிதாபிமான முயற்சியில் பாடசாலை மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் ஈடுபட்டதன் மூலம், இயற்கைப் பேரழிவின் பாதிப்புக்கு உள்ளானவர்களுடன் தமக்கிருக்கும் அனுதாபத்தையும் ஒத்துணர்வையும் வெளிப்படுத்தினர்.

பல மாணவர்கள் தங்களது தனிப்பட்ட சேமிப்பிலிருந்த நிதிகளை வழங்கி வைத்ததுடன், ஏனைய பலர் அத்தியாவசியப் பொருட்களை நன்கொடையாக வழங்கினர்.

கடந்த 17.12.2025 அன்று பாடசாலை அதிபர் மற்றும் பணிக்குழுவினருடன் பல்வேறு தேசியங்களைச் சேர்ந்த பாலர் வகுப்பு முதல் உயர்தர வகுப்பு (Advanced Level) வரையிலான மாணவர்களும் இணைந்து, ரியாதிலுள்ள இலங்கைத் தூதரக வளாகத்திற்கு வருகை தந்து, சவூதி  அரேபியாவுக்கான இலங்கையின் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்களிடம் இந்த நன்கொடைகளை கையளித்தனர்.

இந்த பங்களிப்பை வரவேற்ற தூதுவர் அமீர் அஜ்வத், SLISR மாணவர்கள் மேற்கொண்ட இந்த முன்மாதிரிமிக்க மனிதாபிமான செயற்பாட்டை மனப்பூர்வமாக பாராட்டினார்.

Popular

More like this
Related

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...