முன்பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு பாதுகாப்பான ஆடைகளை அணிவிக்குமாறு வேண்டுகோள்!

Date:

டெங்கு அச்சுறுத்தல் நிலவும் சூழலில், டெங்கு நுளம்புகளிடமிருந்து பாதுகாப்பதற்காக, தங்கள் கைகளையும் கால்களையும் முழுமையாக மறைக்கும் வகையிலான பொருத்தமான ஆடைகளை முன்பள்ளிச் சிறார்கள் அணிவதை உறுதி செய்யுமாறு பெற்றோருக்கு மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் வலியுறுத்தியுள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் கூறினார்.

டெங்குவைத் தடுக்கும் நடவடிக்கையாக, கைகளையும் கால்களையும் மறைக்கும் வகையிலான பொருத்தமான ஆடைகளை அணிந்து பாடசாலைக்குச் செல்ல மாணவர்களை அனுமதிக்கும் வகையில் கல்வி அமைச்சு அண்மையில் எடுத்த முடிவைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுளம்பு கடியினால் பாதிக்கப்படுவதைக் குறைப்பதன் மூலம், பாடசாலை செல்லும் சிறுவர்களிடையே டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்துவதே இம்முயற்சியின் நோக்கமாகும்.

இதே முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முன்பள்ளி செல்லும் சிறுவர்களுக்கும் மேற்கொள்ள வேண்டும் என்று கூறிய அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், சிறுவர்களை முன்பள்ளிக்கு அனுப்பும் முன் அவர்களுக்குப் பாதுகாப்பான ஆடைகளை அணிவிக்குமாறு பெற்றோர்களை வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை!

நீர்ப்பாசனத் துறை இயக்குநர், நீர் மேலாண்மைப் பொறியாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹெரத், தனது...

HIV மற்றும் பாலியல் சார் நோய்களைக் கண்டறிய விசேட ‘நடமாடும் முகாம்கள்’!

எச்.ஐ.வி, கல்லீரல் அழற்சி (Hepatitis) மற்றும் பாலியல் சார் நோய்களை முன்கூட்டியே...

ஜூலை 13: கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையை விட்டு வெளியேறி நான்கு ஆண்டுகள் – ஒரு பார்வை

இலங்கையின் மிகவும் சக்திவாய்ந்த நிறைவேற்று ஜனாதிபதிகளில் ஒருவரான  கோட்டாபய ராஜபக்ஷவை 2022,...

உலகிற்கு கத்தாரை இன்றியமையாததாக மாற்றிய மனிதர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல்-தானி

ஞாயிற்றுக்கிழமை அன்று தனது 74-வது வயதில் மறைந்த கத்தாரின் முன்னாள் மன்னரான...