இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்காக 35 மில்லியன் டொலர்களை திரட்டும் ஐ.நா!

Date:

இலங்கையின் மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதற்காக, அடுத்த நான்கு மாதங்களில் 35 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட ஐக்கிய நாடுகள் சபை உள்ளூர் மற்றும் சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து முயற்சித்து வருவதாக, இலங்கையில் உள்ள ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் தெரிவித்தார்.

இன்று (11) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது உரையாற்றிய அவர், டித்வா சூறாவளி நாடு முழுவதும் அழிவு பாதையை ஏற்படுத்திய பின்னர், ஐ.நா. பேரிடர் மேலாண்மை மையத்துடன் இணைந்து ஏழு துறைகளை உள்ளடக்கிய முன்னுரிமைப் பட்டியலைத் தயாரித்துள்ளதாகக் கூறினார்.

அவுஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், சுவிட்சர்லாந்து, ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் வழங்கிய ஆதரவுடன், இந்த முயற்சிக்காக ஐ.நா ஏற்கனவே 9.5 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுள்ளது என்று ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் குறிப்பிட்டார்.

ஒருங்கிணைந்த திட்டத்துடன் வரும் மாதங்களில் மேலும் 26 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட அவர்கள் முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

Popular

More like this
Related

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...