அதிபரை விழா மேடையில் விமர்சித்த மாணவி:அறிக்கை கோரியுள்ள கல்வியமைச்சு

Date:

தற்போது சமூக ஊடகங்களில் பேசும்பொருளாக மாறியுள்ள கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரி மாணவியின் உரை தொடர்பில் கல்வியமைச்சு குறித்த பாடசாலை அதிபரிடம் அறிக்கையொன்றை கோரியுள்ளது.

கல்லூரியில் அண்மையில் இடம்பெற்ற வண்ண விருது விழாவில் மாணவி விமர்சனத்திற்குரிய கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இந்த விடயம் சமூக ஊடகங்களில் பரவலானதையடுத்து, இது தொடர்பில் கல்வியமைச்சு விசேட அவதானம் செலுத்தியது.

கல்லூரி அதிபர் தலைமையிலான நிர்வாகத்தின் விருது வழங்கல் தீர்மானங்களால் தான் அநீதிக்கு உள்ளானதாக மாணவி கருத்து வெளியிட்டார்.

இந்நிலையில் கல்வியமைச்சு கோரியுள்ள அறிக்கையை பாடசாலை அதிபர் வழங்கியதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் நாலக கலுவௌ தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பிலிப்பைன்சின் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு பிரதமர் விஜயம்

பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய...

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் அதிகரிப்பு

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் நேற்று (11) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்...

இன்று கிடைக்கப்பெறும் அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு...

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (12) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்...