அதிபரை விழா மேடையில் விமர்சித்த மாணவி:அறிக்கை கோரியுள்ள கல்வியமைச்சு

Date:

தற்போது சமூக ஊடகங்களில் பேசும்பொருளாக மாறியுள்ள கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரி மாணவியின் உரை தொடர்பில் கல்வியமைச்சு குறித்த பாடசாலை அதிபரிடம் அறிக்கையொன்றை கோரியுள்ளது.

கல்லூரியில் அண்மையில் இடம்பெற்ற வண்ண விருது விழாவில் மாணவி விமர்சனத்திற்குரிய கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இந்த விடயம் சமூக ஊடகங்களில் பரவலானதையடுத்து, இது தொடர்பில் கல்வியமைச்சு விசேட அவதானம் செலுத்தியது.

கல்லூரி அதிபர் தலைமையிலான நிர்வாகத்தின் விருது வழங்கல் தீர்மானங்களால் தான் அநீதிக்கு உள்ளானதாக மாணவி கருத்து வெளியிட்டார்.

இந்நிலையில் கல்வியமைச்சு கோரியுள்ள அறிக்கையை பாடசாலை அதிபர் வழங்கியதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் நாலக கலுவௌ தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

முதலீட்டாளர் நம்பிக்கையில் இலங்கை முன்னேற்றம்

முதலீட்டாளர் உறவுகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை தொடர்பில் வேகமாக முன்னேறி வரும்...

சுரேஷ் சலேயின் ரிட் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடைச்...

இன்று முதல் தென்மேற்குப் பகுதியில் மழை அதிகரிக்கும்!

இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழைவீழ்ச்சி...

தேசிய பாதுகாப்பை மீள் உறுதி செய்தலில் நீதித்துறையின் வகிபாகம்.

நேற்றைய தொடர்ச்சி... பகுதி-02 குடும்பக் கட்டமைப்புகள் பல தலைமுறைகளைக் கொண்டதாகவும் சமூக அடிப்படையிலானதாகவும் இருந்தன. மத...