சர்வதேச அரபு மொழி தினத்தை அனைத்து முஸ்லிம் பாடசாலைகளிலும் அனுஷ்டிக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

Date:

சர்வதேச அரபு மொழித் தினத்தை சகல முஸ்லிம் பாடசாலைகளிலும் அனுஷ்டிப்பதற்கு தேவையான வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

முஸ்லிம் பாடசாலை மாணவர்களிடையே அரபு மொழி கல்வியை நடைமுறை ரீதியாகச் செயற்படுத்தவும், அவர்களின் அரபு மொழித் திறனை மேம்படுத்தவும், அரபு மொழியுடன் தொடர்புடைய பாரம்பரிய, கலாசார மற்றும் அழகியல் அம்சங்களை இனங்கண்டு பரஸ்பர ஒத்துழைப்புடன் கூட்டாகச் செயற்படவும், பொருளாதார, சுற்றுலாத் துறை மற்றும் சர்வதேச உறவுகளை வலுப்படுத்துவதில் அரபு மொழியின் முக்கியத்துவத்தைச் எடுத்துக்காட்டும் வகையிலும், 18 சர்வதேச அரபு மொழி தினத்தை அனைத்து முஸ்லிம் பாடசாலைகளிலும் கொண்டாடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

2. அதற்கமைய, 18.12.2025 ஆம் திகதி சர்வதேச அரபு மொழி தினத்தை முஸ்லிம் பாடசாலைகளில் கொண்டாடுவதற்குத் தேவையான வசதிகளையும் சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

3. மேலும், பாடசாலைகளின் கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் சர்வதேச அரபு மொழி தினத்தைக் கொண்டாடுவதற்குப் பொருத்தமான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, மாணவர்கள் மத்தியில் அரபு மொழி தொடர்பான ஆர்வத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கல்வி அமைச்சு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

சிந்தனைக்கு….முன்னர் வாழ்ந்த சமூகங்கள் ஏன் அழிக்கப்பட்டன?

ஆக்கம்: அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி) சிரேஷ்ட விரிவுரையாளர் பேருவளை ஜாமிஆ நளீமிய்யா. ஒரு சமூகம்...

ரணிலின் உடல்நிலை குறித்து ஊடகங்களுக்கு கருத்து: வைத்தியர் ருக்ஷான் பெல்லன பணி இடைநீக்கம்

கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷான் பெல்லனவின் சேவைகள்...

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்...

மத்திய மாகாண பாடசாலைகள் நாளை மற்றும் திங்கட்கிழமைகளில் மூடப்படும்!

சீரற்ற வானிலை காரணமாக மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (19)...