நாட்டிலிருந்து புறப்பட்ட இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையினர்!

Date:

ஆப்ரேஷன் சாகர் பந்துவின் கீழ் தங்கள் பணியை வெற்றிகரமாக முடித்த பின்னர், இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) உறுப்பினர்கள் இன்று (05) காலை இலங்கையிலிருந்து புறப்பட்டனர்.

இலங்கை இராணுவத்துடன் ஒருங்கிணைந்து சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரிவான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இவர்கள் நாட்டிலிருந்த காலத்தில் ஆழமாக வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளைச் சென்றடைந்தனர், அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்கு விநியோகித்தனர், கடுமையாக வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு உதவினர்,  அவசரத் தேவை ஏற்பட்டபோது முக்கியமான ஆதரவை வழங்கியதாக இலங்கை விமானப் படை தெரிவித்துள்ளது.

அவர்கள் நாட்டிலிருந்து புறப்படுவதற்கு முன், கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் தளபதி எயார் கொமடோர் அமித ஜெயமஹா, விமானப்படை அதிகாரிகளுடன் சேர்ந்து, இந்த பேரிடர் நிவாரண முயற்சியின் போது இலங்கைக்கு வழங்கப்பட்ட விலைமதிப்பற்ற ஆதரவிற்காக NDRF உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Popular

More like this
Related

இடைநிறுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்தத்தை அமுல்படுத்துமாறு போராட்டம்!

2027ஆம் ஆண்டு வரை இடைநிறுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்ததை உடனடியாக...

கடந்த 8 ஆண்டுகளில் முதல்முறையாக சீனா சென்ற கனடா பிரதமர்!

சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங்கை கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று...

ஜனாதிபதி தலைமையில் வடமாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட தேசிய வீட்டு வசதி திட்டம்

தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ்,...

இலங்கையில் 13% கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நீரிழிவு!

கர்ப்பகாலத்தில் 13 சதவீதத்திற்கும் அதிகமான தாய்மார்களுக்கு நீரிழிவு நோய் (Diabetes) ஏற்பட்டுள்ளதாக...