இயேசு போதித்த ‘பிறரை நேசித்தல்’ எனும் உன்னத தர்மத்தை உலகிற்கு எடுத்துக்காட்டுவோம்: பிரதமரின் வாழ்த்துச் செய்தி!

Date:

ஒற்றுமை, அன்பு மற்றும் பரிவுணர்வுடனும் பொறுப்புடனும் ஒன்றிணைந்து செயற்பட நாம் அனைவரும் இந்த கிறிஸ்மஸ் தினத்தில் உறுதிபூணுவோமென, பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் மாதம் பிறந்தவுடனேயே கிறிஸ்தவ பக்தர்கள் உன்னதமான கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடத் தயாராகிறார்கள். அமைதியின் செய்தியுடன் பாலன் இயேசு பிறந்த செய்தி பெத்லகேம் நகரிலிருந்து உலகிற்கு அறிவிக்கப்பட்ட அந்த நத்தாரை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது கிறிஸ்தவர்களின் அபிலாஷையாகும்.

இருப்பினும், இம்முறை குளிர்ந்த டிசம்பர் மாதம் வழக்கமான மகிழ்ச்சியுடனோ அல்லது உற்சாகத்துடனோ பிறக்கவில்லை. ஒட்டுமொத்த நாட்டையும் அதிரவைத்த இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான எமது சகோதர மக்களின் துயரம் மற்றும் பெருமூச்சுகளுக்கு மத்தியிலேயே இது பிறந்துள்ளது.

ஆயினும், நத்தாரின் உண்மையான அர்த்தத்தை முன்னிறுத்தி, இயேசு கிறிஸ்துவின் வழிகாட்டல்களுக்கு அமைய, எமது நாட்டு மக்கள் அனைத்து வேறுபாடுகளையும் மறந்து ஒற்றுமையுடனும் கூட்டுப்பொறுப்புடனும் பாதிக்கப்பட்ட தமது சகோதர மக்களுக்காக முன்வந்தனர். இது அன்பு, சகவாழ்வு மற்றும் இயேசு போதித்த ‘பிறரை நேசித்தல்’ எனும் உன்னத தர்மத்தை உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளது.

நாட்டை வழமைக்குக் கொண்டுவருவதற்காக அனைத்து மக்களும் ஒரே நோக்கத்துடனும், கூட்டுப் பொறுப்புடனும் தேசத்தின் எதிர்காலத்திற்காக ஒன்றிணைய வேண்டிய தருணத்திற்கு நாம் இப்போது வந்துள்ளோம்.

உண்மையான மாற்றத்தை எதிர்பார்த்த இலட்சக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்புகள் எந்த வகையிலும் சிதைந்துவிட இடமளிக்காது, அவர்கள் எதிர்பார்க்கும் “புதியதோர் நாட்டை” கட்டியெழுப்பும் ஒரே நோக்கத்திற்காக நாம் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.

சிறந்ததொரு நாளை நோக்கிய எமது அனைவரினதும் கனவு நனவாக, பிரஜைகளாக ஒன்றிணைந்து, அன்பு, சகவாழ்வு மற்றும் பொறுப்புணர்வுடன் செயற்பட இந்த நத்தார் தினத்தில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.

இலங்கை வாழ் மற்றும் உலக வாழ் அனைத்து கிறிஸ்தவ பக்தர்களுக்கும் எனது இனிய நத்தார்  தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

Popular

More like this
Related

அமைதிப்பேச்சு: பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்: பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு.

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை...

வாகனங்களுக்கான எரிபொருள் QR முறைமை நீக்கம்?

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி...

ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெறும் ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகர் மௌபியா அவர்களுக்கு கஹட்டோவிட்டவில் கௌரவிப்பு!

கம்பஹா மற்றும் மினுவாங்கொட கல்வி வலயங்களில் நீண்டகாலமாக ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகராகப்...

தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!

நாட்டின் பொதுமக்களின் மிக முக்கியமான பாரம்பரிய விழாவான சித்திரை புத்தாண்டு காலத்தில்...