கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு அதிவேக நெடுஞ்சாலை வருமானம் 25% அதிகரிப்பு!

Date:

கிறிஸ்மஸ் தினத்தன்று அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாக 54 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

நேற்று (25) ஒரு இலட்சத்து 46 ஆயிரம் வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கிறிஸ்மஸ் தினத்திற்கு முந்தைய நாள் அதிவேக நெடுஞ்சாலைகளின் வருமானம் 25 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.

அதன்படி, முன்தினம் (24) 61 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

சாதாரண ஒரு நாளில் அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாகக் கிடைக்கும் வருமானம் 45 மில்லியன் ரூபாவாகும்.

அத்துடன் சாதாரண நாளொன்றில் அதிவேக நெடுஞ்சாலைகளில் ஒரு இலட்சத்து 45 ஆயிரம் வாகனங்கள் பயணிப்பதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...