அனர்த்த நிலைமை காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறை குறித்து ஆராய, இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி கலந்து கொண்டார் .
அனர்த்தத்தால் முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்த வீடுகளை முறையான வழிமுறையின்படி அடையாளம் காணுமாறும், இழப்பீடு வழங்குவதற்குத் தேவையான துல்லியமான தரவுகளை திறம்படப் பெறுவதற்கான விசேட பொறிமுறையை உருவாக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் மீண்டும் இதுபோன்ற பேரழிவால் பாதிக்கப்படாமல் இருக்க நீண்டகால தீர்வை வழங்குவதன் அவசியத்தை சுட்டிக்காட்டியதோடு, அதற்காக துல்லியமான தரவுகளை அடையாளம் காணுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
