அஸ்வெசும தகவல்களைப் புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் 31இல் நிறைவு!

Date:

‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் பதிவு செய்து, தற்போது கொடுப்பனவுகளைப் பெற்று வரும் மற்றும் இதுவரை கொடுப்பனவு கிடைக்காத அனைவரும் தமது தகவல்களைப் புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் 2025 டிசம்பர் 31 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின்படி, நலன்புரி கொடுப்பனவுகளைப் பெறத் தகுதியுடையவர்களின் பெயர் பட்டியலை ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டியது அவசியமாகும்.

குறிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் தமது தகவல்களைப் புதுப்பிக்கத் தவறும் பயனாளிகளுக்கு, அஸ்வெசும கொடுப்பனவுகள் நிறுத்தப்படும் என அந்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், டிசம்பர் 31 ஆம் திகதிக்குப் பிறகு தகவல்களைப் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது என்றும் நலன்புரி நன்மைகள் சபை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...