லங்கா திரிபோஷ நிறுவனத்தின் இலாப வருமானமாக ரூ. 100 மில்லியன் நிதி நேற்று (10) திறைசேரிக்கு வழங்கப்பட்டது.
திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் அமல் அத்தனாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் குழு நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சர் அனில் ஜயந்த பெனாண்டோவிடம் அதற்கான காசோலையை கையளித்தனர்.
இந்நிகழ்வில் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவும் கலந்துகொண்டுள்ளார்.
