பங்களாதேஷில் உச்சக்கட்ட பதற்றம்: டாக்காவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் திருப்பி அழைப்பு!

Date:

தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக புது டெல்லியில் உள்ள பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலயத்தில் தூதரகம் மற்றும் விசா சேவைகளை பங்களாதேஷ் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தூதரகம் இன்று (23) வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, பங்களாதேஷுக்கான இந்திய உயர் ஸ்தானிகர் பிரணய் வர்மா, டாக்காவில் உள்ள வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டு, இந்தியா முழுவதும் அமைந்துள்ள தூதரகங்களில் உள்ள பங்களாதேஷ் அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார்.

இதற்கிடையில், அடுத்த ஆண்டு பெப்ரவரி 12 ஆம் திதி திட்டமிடப்பட்ட தேர்தலை சரியான நேரத்தில் நடத்த நாடு தயாராக உள்ளதாக பங்களாதேஷ் தலைமை ஆலோசகர் மொஹமட் யூனுஸ், இந்தியாவுக்கான அமெரிக்க தூதராகப் பணியாற்றும் செர்ஜியோ கோரிடம் கூறினார்.

இதனிடையே, மாணவர் தலைவர் ஷெரீப் ஒஸ்மான் ஹாடி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சட்டம் ஒழுங்கை பராமரிக்கத் தவறியதற்காக மொஹமட் யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தை பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம் சாட்டியுள்ளார்.

டிசம்பர் 12 அன்று இளைஞர் தலைவர் ஷெரிப் உஸ்மான் ஹாடி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பங்களாதேஷில் மீண்டும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

அவரது மரணம் நாடு முழுவதும் போராட்டங்களைத் தூண்டியது. டாக்காவில் முன்னணி செய்தித்தாள் அலுவலகங்களிலும் ஷேக் ஹசீனா அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சரின் வீட்டிலும் தீ விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

சட்டோகிராமில் உள்ள இந்தியாவின் உதவி உயர் ஆணையரின் இல்லமும் தாக்கப்பட்டிருந்தது.

Popular

More like this
Related

‘தொழில்நுட்ப ஜாம்பவான்கள் குறைக்கட்டும்’: சமூக வலைதளத் தடையை எதிர்க்கும் எலான் மஸ்க்கிற்கு ஸ்பெயின் பிரதமர் பதிலடி.

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் ஸ்பெயின்...

வரலாற்றில் முதன்முறையாக புதிய பெண் பஸ் நடத்துனர்களுக்கு நியமனம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 20 பஸ் நடத்துனர்களுக்கான நியமனங்களை...

எங்களுக்குத் தேவையற்ற கூடுதல் பாலின அடையாளங்கள் தேவையில்லை. ஹங்கேரி பிரதமர்.

பாலின அடையாளம் மற்றும் பாரம்பரிய குடும்ப விழுமியங்கள் குறித்த விவாதத்தில், ஹங்கேரி...

பல மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என இயற்கை...